டவ்-தே புயல்.. நாளை மறுநாள் காலை குஜராத்தின் துவாரகை அருகே கரையை கடக்கிறது!
அகமதா: அரபிக் கடலில் மையம் கொண்டிருக்கும் டவ்-தெ புயல் நாளை மறுநாள் குஜராத் அருகே கரையை கடக்கிறது. இதனையடுத்து குஜராத் மாநில கடலோர பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன.
Recommended Video
அரபிக் கடலில் லட்சத்தீவுகளுக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின்னர் புயலாகவும் உருவானது.

டவ்-தே புயல் அரபிக் கடலில் மையம் கொண்டது முதலே கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கேரளாவில் மழைநீர் ஒருபக்கம், கடல் நீர் இன்னொரு பக்கம் என கடலோர மாவட்டங்கள் பெரும் பரிதவிப்புக்குள்ளாகி உள்ளன.
இன்று அதிகாலை 2.30 மணி நிலவரப்படி கோவாவில் இருந்து தென்கிழக்கே 150 கி.மீ. தொலைவிலும் மும்பைக்கு தெற்காக 490 கி.மீ தொலைவிலும் குஜராத்தின் வேரவல்லில் இருந்து 730 கி.மீ. தொலைவிலும் இந்த டவ்-தே புயல் நிலை கொண்டிருக்கிறது. இந்த டவ்-தெ புயல் நாளை தீவிர புயலாகவு பின்னர் அதிதீவிர புயலாகவும் வலுவடைய உள்ளது.

டவ்-தே புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. டவ்-தே புயலானது குஜராத்தின் துவாரகை அருகே நாளை மறுநாள் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications