தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் டையூ யூனியன் பிரதேசங்களை இணைக்கிறது மத்திய அரசு
டையூ: குஜராத் அருகே உள்ள தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ ஆகியவற்றை ஒன்றாக இணைத்து ஒரே யூனியன் பிரதேசமாக்க மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளது.
லோக்சபாவில் வெள்ளிக்கிழமையன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அர்ஜூன் மெக்வால், இரு யூனியன் பிரதேசங்களை ஒன்றாக்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் இந்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

இந்த இரு யூனியன் பிரதேசங்களில் 35 கி.மீ இடைவெளியில் அடுத்தடுத்து அமைந்துள்ளன. நிர்வாக வசதிக்காக இந்த இரு யூனியன் பிரதேசங்களும் ஒன்றாக்கப்படும் போது தாத்ரா நாகர் ஹவேலி டாமன் டையூ யூனியன் பிரதேசம் என்ற பெயரில் அழைக்கப்பட இருக்கிறது.
இதன் தலைநகராக டையூ இருக்கும். கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலமானது 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதனால் மொத்தம் உள்ள யூனியன் பிரதேசங்கள் எண்ணிக்கை 9 ஆனது.
தற்போது தாத்ரா நாகர் ஹவேலி டாமன் டையூ என ஒரே யூனியன் பிரதேசம் உருவானால் மொத்த யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 8 ஆக குறையும்.












Click it and Unblock the Notifications