காஷ்மீர் காவல் நிலையத்தில் வெடித்து சிதறிய வெடிபொருட்கள்.. பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு! என்ன நடந்தது?
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள நவ்காம் காவல் நிலையத்தில் நேற்று இரவு பயங்கர சத்தத்துடன் வெடிபொருட்கள் வெடித்து சிதறின. இதில் உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தடயவியல் குழுவினர் ஆவர். இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள நவ்காம் என்ற காவல் நிலையமானது, காஷ்மீர் உள்பட பல மாநிலங்களில் பயங்கரவாதிகளை கைது செய்யும் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி உமரின் கூட்டாளிகளை கைது செய்தபோது அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் உள்பட பல்வேறு வகையான வெடிப்பெருட்கள் கூட இந்த போலீஸ் நிலையத்தில் தான் வைக்கப்பட்டிருந்தது.

நேற்று இரவு இந்த காவல் நிலையத்தில் இருந்து திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அதாவது அங்கிருந்த வெடிபொருட்கள் வெடித்து தீப்பிழம்பு பல அடி உயரத்திற்கு எழுந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தியை அணைத்தனர். கூடுதல் போலீசாரும் அங்கு வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவத்தில் முதலில் 8 பேர் பலியானதாக கூறப்பட்டது. தொடந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்து பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் காவல் நிலைய வெடிவிபத்தி பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 25 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதல்கட்ட விசாரணையில் விபத்து என தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதாவது, டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி உமரின் கூட்டாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் உள்பட பல்வேறு வகையான வெடிப்பெருட்கள் இந்த போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இரவில் இது தொடர்பாக தடயவியல் குழுவினர் மற்றும் போலீசார் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக இது நடந்திருக்க கூடும் என தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் இந்திய ராணுவத்தின் 92 பேஸ் மருத்துவமனைக்கும், ஷேர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கும் (SKIMS) கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த உயர் காவல்துறை அதிகாரிகள் நவ்காமுக்கு விரைந்துள்ளனர். அப்பகுதி காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோப்ப நாய்கள் உதவியுடனும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications