போபால் தொடங்கி விசாகப்பட்டினம் வரை இந்தியாவை உலுக்கிய 6 விஷவாயு தாக்குதல் துயரங்கள்
விசாகப்பட்டினம்: ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் விஷ வாயு தாக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இந்தியாவின் ஆறாத ரணமாய் இருப்பது போபால் விஷ வாயு கசிவு துயரம்தான்.
ஆந்திராவின் விசாகப்பட்டினம்.. அதிகாலைப் பொழுது இப்படி ஒரு பேரதிர்ச்சியானதாக இருக்கும் என யாரும் நினைத்துப் பார்க்கவில்லைதான்.. கெமிக்கல் தொழிற்சாலை ஒன்றில் கசிந்த விஷவாயுதான் இந்த துயருக்கு காரணம்
தற்போது வரை 13 பேர் மரணித்து போயுள்ளனர்.. 5,000-க்கும் அதிகமானோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேசத்தையே இந்த துயரம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

போபால் விஷவாயு தாக்குதல்
விஷவாயு என்றதுமே இந்தியர்களின் இதயங்களை ஒருநிமிடம் நிற்க செய்துவிடும் 1984-ம் ஆண்டு போபாலில் நிகழ்ந்த விஷவாயு தாக்குதல். யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து கசிந்த விஷவாயு தாக்கி 3,787 பேர் மாண்டு போனதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதைப் போல 3 மடங்கு உயிரிழப்பு இருக்கவே வாய்ப்பு இருக்கிறது என்பதைத்தான் இன்றும் வாழும் போபால் விஷவாயு தாக்குதலின் சாட்சியங்கள் உறுதியாகச் சொல்கின்றன.

புனே குளோரின் கசிவு
2011-ம் ஆண்டு மகாராஷ்டிராவின் புனேவில் குளோரின் வாயு தாக்கியது. இதில் 20-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். சுத்திகரிப்பு தொழிற்சாலையில்தான் இந்த குளோரின் வாயு தாக்கி இருந்தது.

பிலாஸ் ஸ்டீல் தொழிற்சாலை
2014-ல் 6 உயிர்களை பலி கொண்டது சத்தீஸ்கரின் பிலாஸ் ஸ்டீல் தொழிற்சாலை. இத்தொழிற்சாலையில் நச்சு வாயு வெளியேறி தொழிலாளர்களை நிலைகுலையச் செய்தது. 30க்கும் மேற்பட்டோர் பாதிகப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மும்பை ரத்னகிரி
2018-ம் ஆண்டு மும்பை ரத்னகிரியில் தொழிற்சாலை ஒன்றில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். 14 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 2019-ல் புனேவில் மீண்டும் ஒரு நச்சுவாயுத் தாக்குதல் ஏற்பட்டு 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இப்போது விசாகப்பட்டினத்தில் அடுத்த துயரம் நிகழ்ந்திருக்கிறது.
-
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம் -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ












Click it and Unblock the Notifications