55 ஆண்டுகளில் குடியரசுத் தலைவர்களால் 306 கருணை மனுக்கள் ஏற்பு... சட்ட ஆணையம் தகவல்
டெல்லி : 1950 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 437 ல் 306 மரண தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் அடுத்தடுத்து வந்த குடியரசுத் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சட்ட ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.
மரண தண்டனை வழங்குவது குறித்து மத்திய சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை ஒன்றை வழங்கியது. இந்த பரிந்துரையில் வழங்கப்பட்டுள்ள ஆவணத்தில் 1950 -ல் இருந்து தற்போது வரை குடியரசுத் தலைவர்களால் நிராகரிக்கப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருணை மனுக்களின் எண்ணிக்கை அடங்கிய ஒரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், ஜனவரி 26, 1950 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 437 கருணை மனுக்கள் மரண தண்டனைக்கைதிகளால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பட்டுள்ளன. அவற்றில் 306 கருணை மனுக்கள் அடுத்தடுத்து வந்த குடியரசுத் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. 147 கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
1950-1982 ஆம் ஆண்டு கால கட்டங்களில் ஆறு குடியரசுத் தலைவர்கள் பதவி வகித்துள்ளனர். இந்த காலத்தில் ஒரே ஒரு கருணை மனு மட்டுமே குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 262 கருணை மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளன. முன்னாள் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தனது பதவி காலத்தில் 181 கருணை மனுக்களில் ஒரே ஒரு மனுவை மட்டுமே நிராகரித்துள்ளார்.
மீதமுள்ள 180 மனுக்களையும் அவர் ஏற்று ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணன் தனக்கு வந்த 57 கருணை மனுக்களையும் ஏற்று தண்டனையை குறைத்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பக்ரூதின் மற்றும் அலி அகம்மது ஆகியோர் எந்த ஒரு கருணை மனு மீதும் முடிவெடுக்கவில்லை என்று அந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications