இமாச்சல பிரதேச நிலச்சரிவு.. பலியானோர் எண்ணிக்கை 46 ஆக உயர்வு.. பீதியில் மக்கள்
இமாச்சல பிரதேச நிலச்சரிவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
சிம்லா; இமாச்சல பிரதேச நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது.
இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாண்டி பகுதியில் நேற்றிரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் மாண்டி-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்துகள் மற்றும் வாகனம் சுமார் 800 மீட்டர் பள்ளத்தில் உருண்டு விழுந்தது.

இந்த திடீர் நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. தொடர்மழையால் மீட்புப் பணிகள் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டன. தொடர்ந்து மீட்புப் பணியில் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். அப்போது, நிலச்சரிவில் சிக்கியிருந்த 15 உடல்கள் மீட்கப்பட்டன.
இதனிடையே, நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பம் ஒன்றுக்கு 5 லட்சம் ரூபாய் உதவித்தொகையை அம்மாநில முதல்வர் அறிவித்தார். இந்நிலையில், மாண்டி நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அங்குப் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் மீட்புப் பணிகளை செய்து வருகின்றனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications