தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சரமாரி கேள்வி.. முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என பேட்டி..
டெல்லி: தொலைபேசி இணைப்பு வழக்கு தொடர்பாக தயாநிதிமாறனிடம் சிபிஐ அதிகாரிகள் இன்றும் பல மணி நேரம் சரமாரி கேள்வி எழுப்பினர்.
விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தயாநிதி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், எந்த நேரத்தில் விசாரணைக்கு அழைத்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயார் என்றும், தெரிவித்துள்ளார்.

பி.எஸ்.என்.எல். தொலைப்பேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதன் மூலம் மத்திய அரசுக்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக, தயாநிதி மாறன் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அவரிடம் நேற்று (புதன்கிழமை) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து அவரிடம் 2 வது நாளாக இன்றும் தீவிர விசாரணை நடைபெற்றது. இரண்டு நாள் விசாரணையில் நூற்றுக்கணக்கான கேள்விக் கணைகளை சிபிஐ அதிகாரிகளிடமிருந்து எதிர்கொண்ட தயாநிதிமாறன் பின்னர் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசும்போது, சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகக் கூறினார்.
தான் பயன்படுத்தியது ஒரு தொலைபேசி இணைப்புதான் என்றும், 300 இணைப்புகள் அல்ல என்பதற்கான ஆதாரங்களை சிபிஐயிடம் வழங்கியதாகவும் தயாநிதிமாறன் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications