டெல்லி பா.ஜ.க. தோல்விக்கு நரேந்திர மோடியே காரணம்: போட்டுத் தாக்கும் அன்னா ஹசாரே
ரலேகான் சித்தி(மகாராஷ்டிரா): டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்தற்கு பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம் என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே மிகக் கடுமையாக சாடியுள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தல் தொடர்பாக அன்னா ஹசாரே தெரிவித்துள்ள கருத்து:
நரேந்திர மோடிக்கு ஆதரவாக அலை வீசுவதாக சொல்லப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை.
ஊழலை ஒழிப்போம் என்று நரேந்திர மோடி உறுதியளித்தார். ஆனால் எதுவும் நடைபெறவில்லை. நரேந்திர மோடி மீதான மக்கள் நம்பிக்கை அழிந்து போய்விட்டது.

பாரதிய ஜனதாவின் தோல்விக்கு கிரண்பேடி காரணம் அல்ல.. கிரண்பேடி பாரதிய ஜனதாவில் இணைந்தது தவறு. நான் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.
டெல்லி முதல்வராகியிருக்கும் அரவிந்த் கேஜ்ரிவாலும், பாரதிய ஜனதாவின் முதல்வர் வேட்பாளருமான கிரண்பேடியும் அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்து பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications