டெல்லி - பைசாபாத் ரயில் தடம்புரண்டு விபத்து- 70 பேர் காயம்- அவசர உதவி எண்கள் அறிவிப்பு
டெல்லி: டெல்லி - பைசாபாத் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 70க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெறுவதற்காக அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் இருந்து பைசாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த 14206 என்ற எக்ஸ்பிரஸ் ரயில், நேற்றிரவு உத்திரப்பிரதேசம் ஹபூர் மாவட்டத்தில் கார்க்முக்தேஷ்வர் பகுதியில் எதிர்பாராதவிதமாக தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதில் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டதால், சுமார் 70 பயணிகள் காயமடைந்தனர்.

தகவல் அறிந்த மீட்புக் குழுவினரும், ரயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மீரட், காஸியாபாத் மற்றும் ஹபூர் பகுதி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தால், அந்த மார்க்கத்தில் செல்ல வேண்டிய 9 ரயில்கல் ரத்து செய்யப்பட்டது. 39 ரயில்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன.
தண்டவாளம் சரிசெய்யப்பட்டு இன்று மாலை 5 மணிக்குள் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து சீராகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, விபத்தில் காயமடைந்தவர்கள் பற்றிய விபரங்களைப் பெற அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மீரட் மாவட்ட மருத்துவமனை 0-9410609434 என்ற அவசர உதவி எண்ணை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications