டெல்லி பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு: கொந்தளிக்கும் குற்றவாளிகளின் வக்கீல்

டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் மைனர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் மைனருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. மீதமுள்ள 4 பேரில் பேருந்து டிரைவர் ராம் சிங் கடந்த மார்ச் மாதம் திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இதையடுத்து மீதமுள்ள நான்கு பேரான வினய் சர்மா, அக்ஷய் குமார், பவன் குப்தா மற்றும் முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி விரைவு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை கேட்டதும் தங்கள் மகளுக்கு நீதி கிடைத்த மகிழ்ச்சியில் மாணவியின் பெற்றோர் கண்ணீர்வடித்தனர்.
அதே சமயம் தீர்ப்பை கேட்டு அந்த 4 குற்றவாளிகளும் அழுதனர்.
இந்நிலையில் இது குறித்து அந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் ஏ.பி. சிங் கூறுகையில்,
இந்த தீர்ப்பு நியாயமற்றது, பாராபட்சமானது. அரசியல் அதிகாரத்தின் தலையீட்டால் வழங்கப்பட்டது. பொய்மையே வெல்லும் என்பதற்கு இந்த தீர்ப்பு எடுத்துக்காட்டு. தண்டனை வழங்கப்பட்டவர்கள் அப்பாவிகள். சம்பவம் நடந்த அன்று அக்ஷய் குமார், வினய் சர்மா மற்றும் பவன் குப்தா ஆகியோர் அந்த இடத்திலேயே இல்லை. அக்ஷய் டெல்லியிலேயே இல்லை. முகேஷ் சம்பவ இடத்தில் இருந்திருந்தபோதும் எதுவும் செய்யவில்லை.
இந்த குற்றத்தை தாங்கள் தான் செய்தோம் என்று அவர்களை போலீசார் மிரட்டி ஒப்புக்கொள்ள வைத்துள்ளனர். அவர்கள் ஏழைகள் தானே. யாரும் கேட்க மாட்டார்கள் என்று போலீசார் இவ்வாறு செய்துள்ளனர்.
இன்று முதல் 2 மாதங்களுக்கு எந்த கற்பழிப்பு வழக்குகளும் பதிவாகாவிட்டால் நான் இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய மாட்டேன். ஆனால் கற்பழிப்பு வழக்கு பதிவானால் நிச்சயம் மேல் முறையீடு செய்வேன் என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications