For Daily Alerts
Just In
டெல்லியில் பான், குட்காவிற்கு ஒரு வருடத்திற்கு தடை- ஆம் ஆத்மி அரசு அறிவிப்பு
டெல்லி: டெல்லியில் பான், குட்கா போன்ற புகையிலை மற்றும் போதை வஸ்துகளுக்கு ஒரு வருடத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது ஆம் ஆத்மி தலைமையிலான மாநில அரசு.
நாட்டின் பிறமாநிலங்களிலும் ஏற்கனவே இதுபோன்ற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு இன்று இந்த தடையை விதித்துள்ளது.
இன்று முதல் அமலுக்கு வரும் இந்த தடையையடுத்து டெல்லியில் பான் மசாகா, குட்கா, ஹன்ஸ் போன்ற மெல்லக்கூடிய புகையிலை (சுவிங் டோபாக்கோ) பொருட்களை விற்பனை செய்வதும், வாங்கி பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும்.
இந்த தடையை மீறுவோருக்கு அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிகிறது. இதுதொடர்பான விரிவான தகவல்கள் ஏதும் டெல்லி அரசு தரப்பில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
The Delhi government has banned for one year the sale, purchase and storage of all forms of chewable tobacco, including “guktha, pan masala, khaini and zarda”, in the national capital. The Department of Food Safety on Thursday issued a notification in this regard.
Story first published: Friday, April 15, 2016, 13:56 [IST]