டெல்லியில் 'எஸ்மா' அமல்! போக்குவரத்து ஊழியர் ஸ்டிரைக்கை ஒடுக்க கேஜ்ரிவால் அதிரடி!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை ஒடுக்க எஸ்மா சட்டத்தை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அமல்படுத்தியுள்ளார்.

டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அரசுப் போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுநர் அசோக்குமார் என்பவர் முன்ட்கார் பகுதியில் பைக்கில் வந்த இளைஞர் மீது லேசாக மோதினார். இதில் ஆந்திரமடைந்த இளைஞர் பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கினர். இதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.

Delhi govt. imposes ESMA to reign in striking DTC employees

இதனைக் கண்டித்து டெல்லி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்த ஓட்டுநர் அசோக்குமாரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு கோரினர்.

இந்த வேலை நிறுத்தத்தால் பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிக்குச் செல்வோர் பெரும் அவதிக்கு ஆளாயினர். அரசு பேருந்துகளை மட்டுமே நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் செலுத்திச் செல்கின்றனர்.

இதையடுத்து டெல்லி அரசு பேருந்து ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தை பிரயோகிக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் அத்தியாவசிய சேவை பராமரிப்பு சட்டமான எஸ்மாவை நடைமுறைப்படுத்த முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவிட்டார். இந்த சட்டத்தின் கீழ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு போக்குவரத்து ஊழியர்கள் பெரும் எண்ணிக்கையில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+