தோல் சீவும் கத்தியால் மனைவிக்கு 21 முறை கத்தி குத்து.. கணவனுக்கு ஆயுள் தண்டனை.. என்ன காரணம்?

டெல்லியில் தேவேந்திரதாஸ் என்பவருக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் சுமார் 6 வருடங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்து உள்ளது. கொலையை செய்த தேவேந்திரதாஸ் அப்போதே கைது செய்யப்பட்டுவிட்டார்.

ஆனாலும் இவர் மீது குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமல் போலீஸ் திணறியது. இதை நிரூபிக்க மட்டுமே போலீஸ் இத்தனை வருடங்கள் எடுத்துக் கொண்டு இருக்கிறது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது இந்த நூற்றாண்டில் நடந்த மிகவும் மோசமான கொலை என்று கூறியுள்ளனர்.

எப்படி

எப்படி

இந்த கொலையை செய்ய பழம் உரிக்கும் கத்திய தேவேந்திர தாஸ் பயன்படுத்தி இருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக மனைவியின் உடலில் 21 முறை குத்தி இருக்கிறார். இந்த கத்தி பல நாட்களுக்கு பின்பே போலீசுக்கு கிடைத்தது. அதை வைத்தே போலீஸ் அவனை பிடித்தது.

கல்

கல்

இதனால் அந்த பெண்ணின் உடலில் இருக்கும் எலும்புகள் தேய்ந்து இருக்கிறது. அந்த அளவிற்கு கத்தியால் அவர் குத்தப்பட்டுள்ளார். அதுமட்டும் இல்லாமல் அவர் கொலை செய்யப்பட்ட பின் கல்லால் அடிக்கப்பட்டுள்ளார்.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்த கொலைக்கு காரணம் மிகவும் சின்னதாக சொல்லப்படுகிறது. கணவனும் மனைவியும் சண்டை போட்டுக் கொண்டது அப்படியே பெரிதாகி கொலைக்கு தூண்டி இருக்கிறது என்று நீதிமன்றத்தில் போலீஸ் தெரிவித்துள்ளது.

தண்டனை

தண்டனை

இவருக்கு 21 வருடம் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நூற்றாண்டில் நடந்த மிகவும் மோசமான கொலைகளில் இதுவும் ஒன்று என்று நீதிபதிகள் கூறியுள்ளார். வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை பாராட்டி இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+