டெல்லி இஸ்லாமியர்கள் மீதான வன்முறை திட்டமிட்ட இனப்படுகொலை: மமதா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு
கொல்கத்தா: டெல்லியில் இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை திட்டமிட்ட இனப்படுகொலை என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சி.ஏ.ஏ. ஆதரவு என்ற பெயரில் வடகிழக்கு டெல்லியில் இஸ்லாமியர்கள் மீது குறிவைத்து வன்முறை தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இதில் 46 பேர் பலியாகி உள்ளனர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

நாட்டையே பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கும் இப்படுகொலை சம்பவங்கள், நாடாளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளன.
மேலும் கொல்கத்தாவில் நேற்று சி.ஏ.ஏ. ஆதரவு பொதுக்கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர், மத்திய அரசின் சட்ட திருத்தத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி விரைவில் அமையும். ஆகையால் மமதா பானர்ஜி கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார்.
இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியதாவது:
டெல்லியில் திட்டமிட்ட இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த இனப்படுகொலைக்காக பாஜக இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. இந்த நிலையில் மேற்கு வங்கத்தைக் கைப்பற்றுவோம் என்று வெட்கமே இல்லாமல் பேசி வருகின்றனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்கத்தில் நடத்திய பேரணியில் பங்கேற்ற பாஜகவின் கோலி மாரோ- துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள் என கோஷம் எழுப்பியுள்ளனர். இப்படியான கோஷம் எழுப்பியவர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.
டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய, முழக்கங்களை எழுப்பிய பாஜக தலைவர்கள் இதுவரை ஏன் கைது செய்யப்படவில்லை? இவ்வாறு மமதா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications