டெல்லியைத் தொடர்ந்து கேரளாவிலும் பழமையான டீசல் கார்களுக்கு தடை: பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு
திருவனந்தபுரம்: கேரளாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனைத்து கார்களுக்கும் ஒரு மாத காலத்திற்கு தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு ஓடும் கார்கள், பஸ்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் டீசல் மூலம் இயங்குவதாலும், அவற்றில் பெரும்பாலானவை 10 ஆண்டுகளை கடந்து பழுதடைந்த நிலையில் ஓடுவதாலும் இந்த மாசு அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், டெல்லியில் புதிய டீசல் கார்களை (வாடகைக் கார்) பதிவு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த மே 10-ம் தேதி தடை விதித்து உத்தரவிட்டது. அதே சமயம் பழைய கார்கள், உரிம காலம் முடியும் வரை இயங்க அனுமதி அளித்தது.
இந்நிலையில், கேரளாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனைத்து கார்களுக்கும் சுமார் ஒரு மாத காலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொச்சி மாவட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கேரளாவில் உள்ள 6 முக்கிய நகரங்களில் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்டும்.
2000 சிசி எஞ்சினுக்கு மேல் உள்ள புதிய வாகனங்களுக்கு இனி அனுமதி கிடையாது. மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பொது போக்குவரத்து பேருந்துகளுக்கு இது பொருந்தாது. நீதிமன்றத்தின் இந்த முடிவு கவலை அளிப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications