தயாநிதி மீதான ஏர்செல் வழக்கில் சார்ஜ் சீட்?: அட்டர்னி ஜெனரலிடம் கருத்து கேட்க சொல்லும் சிபிஐ!
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீதான ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது சிபிஐ அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் அட்டர்னி ஜெனரலிடம் கருத்து கேட்கலாம் என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவசங்கரன் தலைமையிலான ஏர்செல் நிறுவனம் 2004 முதல் 2006 வரை தனது செல்போன் சேவைகளுக்கு உரிமம் கோரி வந்தது. அதை மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தடுத்தார் என்பது புகார்.

அத்துடன் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு விற்குமாறு சிவசங்கரனுக்கு தயாநிதி நெருக்கடி கொடுத்தார் என்பதும் குற்றச்சாட்டு. அப்படி சிவசங்கரனின் ஏர்செல் நிறுவனம் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டதற்கு பிரதிபலனாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதியின் சன் டிவி குழுமத்தில் ரூ600 கோடியை மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்தது என்கிறது சிபிஐ.
ஆனால் இந்த விவகாரத்தில் மலேசியா அரசு எந்த ஒரு ஒத்துழைப்பையும் தராததால் வழக்கு கிடப்புக்குப் போனது. உச்சநீதிமன்றம் இந்தியாவில் கிடைத்திருக்கிற ஆதாரங்களைக் கொண்டு விசாரணை நடத்த சொன்னது.
இருப்பினும் தற்போதைய நிலையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய இயலாது என்பது சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா உள்ளிட்ட அதிகாரிகளின் கருத்து. ஆனால் வேறு சில அதிகாரிகளோ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என்று கூறி வந்தனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கின் விசாரணை நிலவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக சிபிஐ அதிகாரிகளிடையே கருத்து நிலவுகிறது; இதனால் அட்டர்னி ஜெனரலிடம் கருத்து கேட்கலாம் என்றும் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications