நாகாலாந்து பலாத்கார கைதி கொலை: சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை
திமாப்பூர்: நாகாலாந்தில் வன்முறை கும்பலால் கைதி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு அம்மாநில முதல்வர் ஸெலியாங் பரிந்துரைத்துள்ளார்.
நாகாலாந்தின் திமாப்பூரில் பெண் ஒருவரை, சையது பரீத் கான் என்பவர் பலாத்காரம் செய்ததாக சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மார்ச் 5-ந் தேதியன்று ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி திமாப்பூர் சிறையை உடைத்து சையது பரீத் கானை வெளியில் இழுத்து வந்து அடித்துக் கொன்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 55 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இச் சம்பவத்தில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட 34 பேரின் புகைப்படங்கள் பல்வேறு தரப்பினரிடமிருந்து சேகரிக்கப்பட்டு போலீசாரால் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை சி.பி.ஐ. விசாரணை நடத்த நாகாலாந்து மாநில அரசு பரிந்துரைத்துள்ளது. இந்த முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று இரவு எடுக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் ஸெலியாங் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications