ஆர்.கே.நகர் எக்ஸிட் போலில் 37% ஆதரவுடன் தினகரனுக்கு வெற்றியாம்... சொல்கிறார் சு.சுவாமி
ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் தினகரன் 37% வாக்குகள் பெற்று வெல்வார் என எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிப்பதாக பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
டெல்லி: இடைத் தேர்தல் நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் தினகரன் 37% வாக்குகள் பெற்று வெல்வார் என எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிப்பதாக பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் அமைதியாகவே இத்தேர்தல் முடிவடைந்துள்ளது.
இன்றைய வாக்குப் பதிவு முடிந்த சிறிது நேரத்தில் பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில், ஆர்கே நகர் எக்ஸிட் போல் முடிவுகளில் தினகரன் 37% வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்ல செய்தி என பதிவிட்டிருக்கிறார்.
Exit poll in RK Nagar puts TTV Dinakaran ahead with 37 % votes and winner. Good news
— Subramanian Swamy (@Swamy39) December 21, 2017
ஆனால் எந்த டிவி சேனலில் வெளியான எக்ஸிட் போல் என சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிடவில்லை. ஆர்கே நகர் வாக்குப் பதிவுக்கு முன்பாக பேராசிரியர் ராஜநாயகம் குழு வெளியிட்ட இரண்டு கருத்து கணிப்புகளிலுமே டிடிவி தினகரன் வெல்வார் என தெரிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.