Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஸ்லாமியரின் வக்பு வாரிய 50% சொத்துகள் அரசு வசமாகும்- புதிய சட்டத்துக்கு எதிராக திமுக வழக்கு- ஆ.ராசா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டுக் குழுவானது வக்பு வாரிய மசோதாவுக்கு ஒப்புதல் தெரிவித்த நிலையில் திமுக எம்பி ஆ.ராசா இதனைத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் திமுக எம்பிக்கள் ஆ.ராசா, எம்.எம்.அப்துல்லா ஆகியோர் கூறியதாவது: 650 பக்கங்களைக் கொண்ட வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கை நேற்று இரவு 10 மணிக்கு எங்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது, நாளை காலை இந்த அறிக்கையை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஏற்றுக் கொள்வதற்காக வாக்கெடுப்புக்கு வைக்கிறோம்,; அதனால் எதிர் கருத்துகளை உடனே தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதன்பின்னர் நாங்கள் கேட்டுக் கொண்டதால் 4 மணிக்குள் தர வேண்டும் என்றனர்.

இதனைத் தொடர்ந்து இரவோடு இரவாக உட்கார்ந்து எங்களது எதிர்கருத்துகளை நாங்கள் கொடுத்துள்ளோம். இஸ்லாமியர்களின் வக்பு சொத்துகளை அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கெட்ட உள்நோக்கத்துடன் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 1995, 2013-ல் வக்பு வாரியத்துக்காக காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தங்களை குறி வைத்து இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளனர். இதை திருட்டுத்தனமான நடவடிக்கை என்றுதான் சொல்ல வேண்டும்.

இஸ்லாமியர் உரிமைகளைப் பாதுகாக்க செம்மைப்படுத்திக் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தங்களை தற்போது மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு திருட்டுத் தனமாக எடுத்துள்ளது. இதை வெளியில் சொன்னால் தெரிந்துவிடும் என்பதை மறைக்கும் வகையில் புதியதாக ஒரு மசோதாவை கொண்டு வருவதாக சொல்லி இருக்கின்றனர். அதாவது வக்பு வாரியம் தொடர்பாக 1954-ல் என்ன சட்டம் இருந்ததோ அந்த நிலைக்கு கொண்டு போயிருக்கிறார்கள்.

மத்திய பாஜக அரசின் இந்த புதிய சட்ட திருத்தத்தால் 40% முதல் 50% இஸ்லாமியர்களின் வக்பு வாரிய சொத்துகள் அரசாங்கத்துக்கு போய்விடும் அபாயம் இருக்கிறது. நீதிமன்ற நடவடிக்கைகளில் உள்ள வக்பு வாரிய சொத்துகளுக்கும் கூட இந்த புதிய சட்ட திருத்தம் பொருந்தும். அதையும் சேர்த்தால் மேலும் 10% சொத்துகள் அரசாங்கம் வசமாகிவிடும். இதன் மூலம் டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களின் பெருநகரங்களில் உள்ள பல லட்சம் ரூபாய் கோடி மதிப்பிலான வக்பு வாரிய சொத்துகள் அரசு வசமாகும். இதற்காகவே இந்த திருட்டுத்தனமான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடரும். இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். இவ்வாறு ஆ.ராசா, எம்.எம்.அப்துல்லா எம்பிக்கள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+