நொடிக்குநொடி ஏறிய கரண்ட் பில்.. பிரிட்ஜ், 1 டிவி, 4 பல்புக்கு ரூ.20 லட்சம்.. அந்தம்மா பயந்துட்டாங்க
காந்திநகர்: காந்தி நகரில் பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார். என்ன நடந்தது குஜராத்தில்?
கடந்த மாதம் தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம், பிஜினேபள்ளி மண்டல், கானாபூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. அங்குள்ள பிஜினேபள்ளி மண்டல் கானாபுராவைச் சேர்ந்தவர் வேமரெட்டி.. இவரது வீட்டில் 0.60 கிலோவாட் மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால், 21 கோடி ரூபாய்க்கு கரண்ட் பில் வந்துவிடடது.
புகார்கள்: வெறும் 297 யூனிட்கள் பயன்படுத்தப்பட்டதற்கு ரூ.21,47,48,569 கரண்ட் பில்? என்று வேமரெட்டி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு, இதுகுறித்து புகார் சொன்னார்..

அப்போதுதான் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டணம் அதிகமாக வந்துவிட்டதாகவும், நுகர்வோர்கள் அளித்த புகாரின் பேரில் பிரச்னையை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியிருந்தனர். இதற்கு பிறகுதான், வேமரெட்டிக்கு நிம்மதியே வந்தது.
கரண்ட் பில்: இப்போது குஜராத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. நவ்சாரியில் உள்ள ஒரு வீட்டிற்கு ஜூன்-ஜூலை மாதத்திற்கான மின் கட்டணமாக ரூ.20 லட்சம் வந்திருக்கிறதாம். இதை பார்த்து மொத்த குடும்பத்தினரும் நிலைகுலைந்து போய்விட்டார்கள்.. பெட்ரோல் பங்கில் பணிபுரியும் பங்க்திபென் படேல் என்ற பெண்ணின் வீட்டிற்குதான் இப்படி ரூ.20 லட்சம் கரண்ட் பில் வந்திருக்கிறது.
இது குறித்து பங்க்திபென் சொல்லும்போது, "எங்கள் வீட்டில் 4 பேர் மட்டுமே இருக்கிறோம். எங்கள் வீட்டில் 4 பல்ப், 4 ஃபேன், 1 பிரிட்ஜ், 1 டிவி மட்டுமே இருக்கிறது.. வழக்கமாக 2 மாதத்துக்கு ரூ.2 ஆயிரம் முதல் 2,500 வரைதான் கரண்ட் பில் வரும்.. இந்த முறை ரூ.20,01,902 வந்திருக்கிறது.. ஒன்னுமே புரியல" என்கிறார்.
புகார்கள்: இதற்கு பிறகு, குஜராத் மின்சார வாரியத்தை (GEB) தொடர்பு கொண்டபோது, அவர்கள் புகார் பதிவு செய்யுமாறு சொல்லியிருக்கிறார்கள். அதன்படியே, பங்க்தபென் புகார் பதிவு செய்ததையடுத்து, மின்வாரிய அதிகாரி இது தொடர்பாக மதிப்பாய்வு செய்துள்ளனர். அப்போதுதான் மின் மீட்டரில், ரீடிங் தப்பாக கணக்கெடுக்கப்பட்டது தெரியவந்தது.. பிறகு, அடுத்த 1 மணி நேரத்தில் மின் கட்டணமும் சரிசெய்யப்பட்டது. இதற்கு பிறகுதான், பங்க்திபென் குடும்பத்தினருக்கு நிம்மதியே வந்தது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications