நாடே கவனிக்கும் தேர்தல்.. கொரோனா அச்சம் வேண்டாம்.. மக்கள் தைரியமாக வாக்களியுங்கள்.. மம்தா அழைப்பு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று ஏழாம் கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில், கொரோனா அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்,
மேற்கு வங்கத்தில் இன்று ஏழாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இன்று மொத்தம் 34 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கைகள் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது.
கொரோனா இரண்டாம் அலை காரணமாகப் பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா தங்கள் தேர்தல் பிரசாரங்களை ரத்து செய்துள்ளனர்.

மத்திய அரசு தோல்வி
இந்நிலையில் காணொலி வாயிலாக நேற்று பிரசார கூட்டத்தில் பேசிய திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி, நான் தேர்தல் கூட்டங்களைவிட அதிகமாக கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான கூட்டங்களை நடத்துகிறேன். மத்திய அரசு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்துவிட்டது. மத்திய அரசைத் துணிச்சலுடன் எதிர்க்க மேற்கு வங்கத்தால் மட்டுமே முடியும்.

பிரதமர் மோடி
ஒட்டுமொத்த நாடே இந்தத் தேர்தலைக் கவனித்து வருகிறது. பிரதமர் மோடி மன் கி பாத்தில் பேசுகிறார். வெறுமென பேசிவிட்டு, அவர் எங்கோ சென்றுவிடுகிறார். மேலும், மேற்கு வங்கத்திற்கு வர வேண்டிய ஆக்சிஜன் எல்லாம் உத்தரப் பிரதேச்திற்கு அனுப்பப்படுகிறது. சரியான நேரத்தில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்தால், வைரஸ் மீண்டும் பரவியிருக்காது.

அச்சம் வேண்டாம்
உத்தரப் பிரதேசத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் எரிக்கப்படுகின்றனர். அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் இதே நிலைதான். சொல்லப்போனால் மேற்கு வங்க மக்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றே கூற வேண்டும். இங்கு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களியுங்கள், இது மிகவும் முக்கியமான ஒரு தேர்தல் என்று பேசினார்,
Recommended Video

கடும் கட்டுப்பாடுகள்
மேற்கு வங்கத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் வெளியிட்ட கொரோனா விதிமுறைகளை எந்தக் கட்சியும் முறையாகப் பின்பற்றவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து, பிரசாரத்திற்குப் பல புதிய கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் விதித்திருந்தது. அதன்படி வாகன பேரணி உள்ளிட்ட அனைத்து வித பேரணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. பொதுக்கூட்டங்களிலும் 500 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என அறிவிக்கப்பட்டது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications