குஜராத்தில் நிலநடுக்கம்.. குலுங்கிய கட்டிடங்கள்.. அதிர்ந்த மக்கள்.. 5.5 ரிக்டர் அளவில் பதிவு
அஹமதாபாத்: 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்டது. அகமதாபாத் உட்பட குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
தேசிய நில அதிர்வு மைய அதிகாரிகளின் கூற்றுப்படி, நிலநடுக்கத்தின் மையப்பகுதி கட்ச் மாவட்டத்தின் பச்சாவ் அருகே இருந்தது.

இன்று இரவு 8:13 மணியளவில் குஜராத்தின் ராஜ்கோட்டிலிருந்து 122 கி.மீ வடமேற்கே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்.சி.எஸ்) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது கட்டிட சேதம் பற்றிய உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் குவிந்தனர். நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் குழுங0்கியதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
ட்விட்டரில் மக்கள் நிலநடுக்க அனுபவத்தை உடனடியாக பகிர்ந்து கொண்டனர். சிலர் நாட்டில் நடந்து வரும் பிரச்சினைகள், குறிப்பாக கொரோனா வைரஸ் மற்றும் சூறாவளிகளுடன் இந்த நிகழ்வை தொடர்புபடுத்தி பதிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications