துக்க வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறி நெகிழ வைக்கும் குரங்கு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ
Recommended Video
நார்கண்ட்: கர்நாடகாவில் துக்க வீட்டில் அழுது கொண்டிருந்தவரை குரங்கு ஒன்று சமாதானப்படுத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. குரங்குகள் என்றாலே அதனுடைய சேட்டைகள், நாம் வைத்திருக்கும் தின்பண்டங்களை அபகரிப்பது, நம்மை போலவே நடித்து காட்டுவது உள்ளிட்ட பல சம்பவங்கள் தான் நினைவில் வரும்.
ஆனால் கர்நாடகாவில் உள்ள குரங்கு ஒன்றின் செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது. நார்கண்ட்டில் உடல்நலக்குறைவால் முதியவர் ஒருவர் மரணித்ததை எண்ணி, உறவினர்களும் ஊர் பொதுமக்களும் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தனர்.

இறுதி சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதனையடுத்து துக்க வீட்டிற்கு வந்த அனைவரும் கதறி அழுதனர். அப்போது அங்கு வந்த குரங்கு, ஒன்று அழுது கொண்டிருந்த பெண் ஒருவரது அருகே சென்று அவரது தோளில் கை வைத்து, தலையை வருடி, அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறியுள்ளது. மேலும் அவரது கண்ணீரையும் தனது கையால் துடைத்து நெகிழ வைத்தது.
இது குறித்து அந்த ஊர் மக்களிடம் கேட்ட போது, இந்த குரங்கு எல்லா துக்க வீடுகளுக்கும் சென்று ஆறுதல் சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளது என கூறினர். இதனால் அக்குரங்கு தங்களில் ஒருவராகவே மாறிவிட்டதாக அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

மிருகங்களுக்கு நம்மை போன்ற உணர்வு இல்லையென்று யார் சொன்னது. மனிதர்களின் உணர்வுகள் புரிந்திருப்பதால் தானே இந்த குரங்கால் துக்க வீடுகளுக்கு சென்று மனிதர்களை போல ஆறுதல் கூற முடிந்திருக்கிறது. துக்க வீட்டில் குரங்கு ஆறுதல் சொல்லும் வீடியோவை பார்த்த பலரும் அதன் மனிதாபிமானத்தை வியந்து பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications