படையப்பாவுக்கு கோவம் வந்துடுச்சு.. மூணாறு ரோட்டில் இறங்கி கார்களை நொறுக்கிய யானை.. மக்கள் பீதி!
மூணாறு: மூணாறு பகுதியில் படையப்பா யானை கார்கள், டூ வீலரை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த படையப்பா யானை, திடீரென டென்ஷனாகி வாகனங்களை அடித்து நொறுக்கியதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே யானை ஒன்று அடிக்கடி உலா வருவது வழக்கம். அந்த யானைக்கு படையப்பா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மூணாறு பகுதியில், பொதுமக்களை அச்சுறுத்தி வந்த படையப்பா காட்டு யானை, உணவு தேடி அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகும் என்பதால் அப்பகுதி மக்களுக்கு பரிட்சயமானதாக இருந்து வருகிறது.

மூணாறு சுற்றுவட்டார பகுதியில், படையப்பா யானை, ஒற்றைக் கொம்பன் யானை ஆகியவை குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன. வீடுகளில் இருக்கும் உணவுப் பொருட்களை தின்றும், கொட்டியும் நாசம் செய்கின்றன. விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், குட்டியார் வேலி, சைலண்ட் வேலி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டிருந்த படையப்பா யானை கடந்த 12 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சாலையில் இறங்கியது. அப்போது சைலண்ட் வேலி பகுதியில் சீரியல் ஷூட்டிங் முடிந்து 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் திரும்பிக் கொண்டிருந்தன.
அப்போது வாகனங்களுக்கு இடையில் புகுந்து சாலையின் நடுவே படையப்பா யானை சிக்கிக் கொண்டது. யானையின் முன்னும், பின்னும் வாகனங்கள் வந்தன. இதனால், சாலையை கடக்க முடியாமல் தவித்த படையப்பா யானை ஒரு கட்டத்தில் ஆக்ரோஷம் அடைந்து இரண்டு கார்களை துதிக்கையால் அடித்து நொறுக்கியது.
யானை தாக்கியதால், காரில் இருந்தவர்கள் அதனை நிறுத்திவிட்டு தப்பி ஓடியதால், காயமின்றி தப்பினர். தகவல் அறிந்து வந்த வனத்துறை யானை தடுப்பு பிரிவினர் படையப்பா யானையை விரட்டினர். இதனால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
படையப்பா யானை திடீரென 2 கார்கள், ஒரு டூ வீலரை துதிக்கையால் நொறுக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications