நிச்சயதார்த்த போட்டோவை பேஸ்புக்கில் போட்ட கேரள இளைஞர்... பலாத்கார வழக்கில் கைது
கோழிகோடு: கேரளாவில் நிச்சயதார்த்த போட்டோவை பேஸ்புக்கில் வெளியிட்ட இளைஞர் மீது, முன்னாள் காதலி பாலியல் பலாத்கார வழக்குத் தொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த இளைஞரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கோழிகோடு மாவட்டம் கோராஷந்து பகுதியை சேர்ந்த இளைஞர் ஷமீர்( 29). சமீபத்தில் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நண்பர்கள் பார்ப்பதற்காக பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார் ஷமீர்.
பேஸ்புக்கில் ஷமீரின் புகைப்படங்களைப் பார்த்து அவரது முன்னாள் காதலி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்தார். அப்புகாரில், ‘ஷமீர் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் வாக்குறுதி அளித்தார். பல்வேறு இடங்களுக்கு நாங்கள் இருவரும் இணைந்து சுற்றினோம். என்னைப் பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றி விட்டார்' என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இப்புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376-ன் படி பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்த போலீசார், ஷமீரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications