விஐபி எண்களுடன் திருட்டு வண்டிகள்- உபியில் 4 பேர் கைது
ஃபாருகாபாத்: உத்தர பிரதேசம் முழுவதும் பல்வேறு திருட்டு வாகனங்கள் விஐபி பதிவு எண்ணுடன் சுற்றிவரும் தகவல் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அம்மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து திருடப்பட்ட வாகனங்கள் வி.ஐ.பி எண்கள் வழங்கப்பட்டு எந்தவித இடையூறுகளும் இல்லாமல் உபயோகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போக்குவரத்து துறையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் உட்பட 4 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இம்மோசடி குறித்து விளக்கம் அளித்த போக்குவரத்து துறை உயரதிகாரி உதய்வீர் சிங், "மாநிலத்தில் கிட்டதட்ட 15க்கும் மேற்பட்ட திருட்டு வாகனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அவை அனைத்திற்கும் விஐபி ரெஜிஸ்ட்ரேஷன் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த சுபாஷ் குமார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications