570 அடி உயர முகேஷ் அம்பானி வீட்டின் 9வது மாடியில் திடீர் தீ.. காரணம் "4ஜி"!
தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான வீட்டில் நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டது.
மும்பை: மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான வீட்டில் 9-ஆவது மாடியில் தீவிபத்து ஏற்பட்டது.
உலகிலேயே மிகவும் சொகுசு குடியிருப்பு பகுதியாக கருதப்படுவது மும்பையில் உள்ள முகேஷ் அம்பானிக்கு சொந்தமான அண்டிலியா கட்டடம் ஆகும். சுமார் 27 மாடிகளை கொண்டது. இதன் உயரமோ 570 அடியாகும்.

Recommended Video

15 ஆம் நூற்றாண்டு காலத்தில், அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில், மேற்குப் போர்ச்சுகலுக்கும், ஸ்பெயினுக்கும் தொலைவில் அமைந்திருந்து மறைந்து போனது என கூறப்படும் அண்டிலியா என்ற ஒரு கற்பனைத் தீவின் பெயரை அம்பானி தனது குடியிருப்புக்கு சூட்டினார்.

மும்பை ஆல்டாமௌன்ட் சாலையில் உள்ள இந்த குடியிருப்பில் 9-ஆவது தளத்தில் நேற்றிரவு தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்த ஆல்டாமௌன்ட் சாலை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில்சேதம் ஏதும் ஏற்படவில்லை. 9ஆவது மாடியில் அமைக்கப்பட்ட 4ஜி ஆன்டனாவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications