குஜராத்தில் உள்ள ஜப்பான் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து.. களத்தில் 25 தீயணைப்பு வாகனங்கள்.. ஷாக்!
காந்தி: குஜராத்தில் சனந்த் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு தீயை அணைக்க தீவிரமாக முயற்சிகள் நடந்து வருகிறது.
குஜராத்தின் அஹமதாபாத் பகுதியில் உள்ள சனந்த் பகுதி அதிக தொழிற்சாலை உள்ள இடம் ஆகும். கெமிக்கல் தொழிற்சாலை தொடங்கி எலக்ட்ரானிக் தொழிற்சாலைகள் வரை நிறைய நிறுவனங்கள் உள்ளது. குஜராத்தின் மிகவும் வளர்ச்சி அடைந்த பகுதிகளில் ஒன்றாகும்.
இந்த நிலையில் குஜராத்தில் சனந்த் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு இருக்கும் ஜப்பான் தொழிற்சாலை ஒன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
#WATCH Gujarat: Fire breaks out at a factory in GIDC (Gujarat Industrial Development Corporation) in Sanand area of Ahmedabad. 25 fire tenders present at the spot. Fire-fighting operation underway. No casualties reported. pic.twitter.com/shOrlBak5H
— ANI (@ANI) June 24, 2020
GIDC எனப்படும் Gujarat Industrial Development Corporation பகுதியில் இந்த தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலை சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் தொழிற்சாலை என்கிறார்கள். இந்த விபத்தில் யாராவது பலியானார்களா என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அங்கு தீயை அணைக்க தீவிரமாக முயற்சிகள் நடந்து வருகிறது. 25 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்க தீவிரமாக முயன்று வருகிறார்கள்