குஜராத்தில் நுழைய முயன்ற பாக். தீவிரவாதிகள் கப்பல்! கடற்படை தடுத்ததால் வெடிவைத்து தகர்ப்பு!
போர்பந்தர்: குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் கடல்பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் மீன்பிடி படகை இந்திய கடலோர காவல்படை தடுத்து நிறுத்தியது. இந்திய கடற்படை நெருங்கிய நிலையில் திடீரென அக் கப்பல் வெடிவைத்து தகர்த்தக்கப்பட்டது. அதில் இருந்த 4 பேரும் தீவிரவாதிகள் என்று தெரியவந்துள்ளது.
குஜராத்தின் நீண்ட கடல்பகுதி வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலைகளை நடத்துவதாக உளவுத்துறை பலமுறை தெரிவித்திருந்தது. அத்துடன் கராச்சியில் இருந்து மீன்பிடிக் கப்பல் மூலமாக பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கப்பல் ஒன்று குஜராத்தை நோக்கி வருவதாகவும் உளவுத்துறை எச்சரித்திருந்தது.

இதனால் குஜராத் கடல் பகுதியில் கடலோர காவல்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 31-ந் தேதியன்று குஜராத்தின் போர்பந்தர் கடல் பகுதிக்குள் பாகிஸ்தான் மீன்பிடிக் கப்பல் அத்துமீறி நுழைய முயன்றது.
உடனடியாக இந்திய கடலோரக் காவல்படை அந்த மீன்பிடிக் கப்பலை நோக்கி சென்றது. அப்போது முன்னெச்சரிக்கையாக துப்பாக்கிச் சூட்டையும் கடலோர காவல்படையினர் மேற்கொண்டனர்.
ஆனால் பாகிஸ்தான் மீன்பிடிக் கப்பல் மிக வேகமாக தப்பிச் செல்ல முயன்றது. இந்த முயற்சி பலனளிக்காத நிலையில் திடீரென மீன்பிடிக் கப்பல் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இதனால் அந்த மீன்பிடிக் கப்பலில் தீவிரவாதிகள் இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அக்கப்பலில் மொத்தம் 4 பேர் இருந்துள்ளனர். இந்த சம்பவம் தற்போதுதான் வெளியாகி இருக்கிறது. இதை பாதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. இந்திய கடற்பரப்பில் இருந்து 365 கி.மீ நாட்டிகல் மைல் தொலைவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நாட்டின் அனைத்து கடற்பரப்பும் தீவிர கண்காணிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
மும்பை பாணி தாக்குதலுக்கு சதி?
2008 ஆம் ஆண்டு இதேபோல் மீன்பிடி கப்பல் மூலம் மும்பைக்குள் நுழைந்த தீவிரவாதிகள் மிகக் கொடூரமான தாக்குதலை நடத்தினர். இதில் 166 பேர் பலியாகினர்.
இதேபோன்ற ஒரு தாக்குதலை குஜராத்தில் நடத்துவதற்காக தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
போர்பந்தர், துவாரகைக்கு குறி?
குஜராத்தின் போர்பந்தரில்தான் காந்தி பிறந்த இல்லம் உள்ளது. அதேபோல் போர்பந்தர் அருகேதான் புகழ்பெற்ற துவாரகை உள்ளது. ஆதி துவாரகை (பெட் துவாரகா) நகரம் என்ற துவாரகையில் இருந்து சிறிது தொலைவில் கடலுக்குள் இருக்கிறது.
இவற்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் வந்திருக்கலாம் என்றும் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications