விடாது கறுப்பு! 150 பேர் உயிரை குடித்த குஜராத் மோர்பி ஆறு- 1979-ல் 2000 பேரை பலி கொண்டது- சாபமோ?
அகமதாபாத்: குஜராத்தின் மோர்பியில் மச்சு ஆற்று நடுவில் அமைக்கப்பட்ட கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் 150க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். இதே குஜராத் மோர்பி மச்சு ஆற்றில் 1979-ம் ஆண்டு அணை உடைந்து 2,000க்கும் அதிகமானோர் பலியான பெருந்துயரமும் நிகழ்ந்திருக்கிறது.
குஜராத் மோர்பில் மச்சு ஆற்றின் குறுக்கே பழமையான கேபிள் பாலம் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த கேபிள் பாலம் பழுதடைந்த நிலையில் சீரமைக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் குஜராத் மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இப்புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கேபிள் பாலம் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென திறக்கப்பட்டது. இதனால் கேபிள் பாலத்தில் பொதுமக்களும் பயன்படுத்த தொடங்கினர்.

கேபிள் பாலம்
அந்த கேபிள் பாலத்தில் 500க்கும் மேற்பட்டோர் உற்சாகத்துடன் ஒரே நேரத்தில் ஏறி நின்று ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் அமர்க்களப்படுத்தினர். இந்த மகிழ்ச்சி சிறிது நேரம்தான் நீடித்தது. திடீரென கேபிள் பாலம் அறுந்து ஆற்றுக்குள் விழுந்ததில். இதில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை மட்டுமல்ல உலகத்தையே பெரும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது இச்சம்பவம்.

மச்சு ஆறு
இதே குஜராத்தின் மோர்பி மச்சு ஆறு ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மனிதர்களை காவு வாங்கியும் இருக்கிறது. மச்சு ஆற்றின் குறுக்கே முதலாவது 1959-ல் கட்டப்பட்டது. 1972-ம் ஆண்டு மச்சு ஆற்றின் குறுக்கே 2-வது அணையும் கட்டப்பட்டது. 1979-ம் ஆண்டு வரலாறு காணாத பெருமழை மோர்பி பகுதியில் கொட்டித் தீர்த்தது.

1979 பெரு வெள்ளம்
1979-ம் ஆண்டு கனமழையாம் மச்சு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இப்பெருவெள்ளம் சுனாமி பேரலைகளைப் போல விஸ்வரூபம் எடுத்தது. இதனால் 1972-ம் ஆண்டு கட்டப்பட்ட அணை உடைந்தது. மச்சு ஆற்றை சுற்றிய 5 கிமீ நகரப் பரப்பு அப்படியே வெள்ளத்தில் மூழ்கியது.

2,000 பேர் பலி
மச்சு ஆற்று பெருவெள்ளத்தால் அணை உடைந்து உயிரிழந்தோர் எண்ணிக்கையில் இன்னமும் குழப்பம் உள்ளது. சுமார் 2,000 பேர் மரணித்துப் போயினர் என்பது பொதுவான கருத்து. ஆனால் 10,000 முதல் 20,000 பேர் வரை மச்சு ஆற்று வெள்ளத்தால் மாண்டு போயிருப்பர் எனவும் கூறப்படுகிறது. இதனை வைத்து திரைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. இப்போது அதே மச்சு ஆறுதான் மீண்டும் மனித உயிர்களை காவு வாங்கி இருக்கிறது. என்ன சாபமோ? யார் அறிவார்?
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications