வன்முறைக்கு இவங்க தான் காரணம்! சரி மறப்போம்.. மன்னிப்போம்! சுதந்திரநாளில் மணிப்பூர் சிஎம் பரபரப்பு
இம்பால்: மணிப்பூரில் 3 மாதங்களுக்கும் மேலாக வன்முறை நடந்து வரும் நிலையில் சுதந்திர தினமான இன்று மறப்போம்.. மன்னிப்போம் என அம்மாநில முதல்வர் பீரன் சிங் மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதோடு மணிப்பூர் வன்முறையின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது பற்றியும் கூறி அவர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இங்கு வசிக்கும் மக்கள் மைத்தேயி மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு குக்கி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக கடந்த மே மாதம் 3ம் தேதி நடந்த ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது.

3 மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பவில்லை. வன்முறை தொடரும் நிலையில் ஆங்காங்கே பதற்றம் நிலவி வருகிறது. இந்த வன்முறையில் 180க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
மேலும் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ வெளியாகி நாட்டையை உலுக்கியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை மணிப்பூர் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு இதுகுறித்த விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் தான் மணிப்பூர் வன்முறை விவகாரம் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது. ராஜ்யசபா, லோக்சபா உள்ளிட்டவை முடங்கின. இறுதியாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு லோக்சபாவில் எதிர்க்கட்சியினர் மணிப்பூர் பற்றி பேசினர். அதற்கு பிரதமர் நரேந்திர மோடியும் விளக்கம் அளித்தார். மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
இந்நிலையில் தான் இன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிய பிரதமர் மோடி, "மணிப்பூர் மக்களுடன் நாடு நிற்கிறது. அமைதியின் மூலமே அங்கு தீர்வு காண முடியும். மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன." என்றார்.
இந்நிலையில் தான் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடந்த சுதந்திர தின விழாவில் அம்மாநில முதல்வர் பீரன் சிங் பங்கேற்று கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதன்பிறகு அவர் பேசினார். இந்த வேளையில், ‛‛கடந்த 3 மாதங்களாக வளர்ச்சி பணி என்பது பாதிக்கப்பட்டுள்ளது.
அமைதி மற்றும் வளர்ச்சி பாதைக்கு நாம் திரும்ப வேண்டும். வன்முறை என்பது எந்த வளர்ச்சியையும் கொண்ட வராது. சமூகங்களுக்கு இடையேயான தவறான புரிதல் மற்றும் தவறான செய்தி பரவல் இருந்தால் அமர்ந்தும் விவாதிக்கலாம். இதற்கான கதவு எப்போதும் திறந்தே வைககப்பட்டுள்ளது.
மறப்பதன் மூலமாகவும், மன்னிப்பதன் மூலமாகவும் நாம் இணக்கமாக வாழ முடியும். அதோடு கடந்த 3 மாதங்களாக இழந்த வளர்ச்சிப் பாதையின் பயணத்தை நாம் தொடங்க முடியும். மாநில வன்முறைக்கு வெளியில் இருந்து வரும் சக்திகள் தான் காரணம். இந்த சக்திகள் தான் அமைதியை சீர்க்குலைக்க முயற்சித்தன.
இந்திய அரசியலமைப்பு எதிராக மாநில அரசு எதையும் செய்யவில்லை. அதனை ஒருபோதும் செய்யவும் மாட்டோம். அப்படி செய்தால் அரசு ஒருபோதும் நிலைத்து நிற்க முடியாது. இதனால் மக்கள் அமைதி காக்க வேண்டும். அதோடு நீதி, சமத்துவத்துக்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். மேலும் போதைப்பொருளுக்கு எதிரான போர் என்பது தொடரும்'' என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications