Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உ.பி. சிறையில் திடீர் மரணம் அடைந்த 'தாதா' முக்தார் அன்சாரியின் தாத்தா இவரா? தமிழகத்துக்கு தொடர்பா?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தை கதிகலங்க வைத்த நிழல் உலக தாதா முக்தார் அன்சாரி சிறையில் திடீரென மரணமடைந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. தந்தையின் உணவில் மெல்லக் கொல்லும் விஷம் கலக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக முக்தார் அன்சாரியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியதையடுத்து தற்போது உ.பி.யில் ஆளும் பாஜக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் 1980களில் இருந்து நிழல் உலக தாதாவாக கோலோச்சியவர் முக்தார் அன்சாரி. இவர் மீது 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன. காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும் முக்தார் அன்சாரிக்கு கிடைத்தது.

Former Indian National Congress president Mukhtar Ahmed Ansari s grand son Mukhtar Ansari

2005-ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வரும் முக்தார் அன்சாரி, தேர்தல்களில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானவர். அவரது மகனும் எம்.எல்.ஏ.தான்.

இந்த நிலையில்தான் முக்தார் அன்சாரி திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் முக்தார் அன்சாரியின் உணவில் மெல்லக் கொல்லும் விஷம் கலக்கப்பட்டது; அதனால்தான் மரணம் ஏற்பட்டது என்பது குடும்பத்தினர் குற்றச்சாட்டு. இதனையடுத்து முக்தார் அன்சாரியின் மரணம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Former Indian National Congress president Mukhtar Ahmed Ansari s grand son Mukhtar Ansari

முக்தார் அன்சாரி யார்?: முக்தார் அன்சாரியின் தாத்தா பெயர் முக்தார் அகமது அன்சாரி. இந்திய விடுதலைப் போராட்ட வீரர். முஸ்லிம் லீக் தலைவராகவும் இருந்தவர். அத்துடன் மட்டுமல்ல்.. 1927-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு டிசம்பர் 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை அன்றைய மதராஸாகிய இன்றைய தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில்தான் நடைபெற்றது.

இந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைவராக இருந்தவர் முக்தார் அகமது அன்சாரிதான். இம்மாநாட்டில்தான் சைமன் கமிஷன் புறக்கணிப்பு! சைமனே திரும்பிப் போ என்கிற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பூரண சுயராஜ்ஜியமே இலக்கு என்ற பிரகடனத்தை ஜஹவர்லால் நேரு வெளியிட்டதும் இந்த மாநாட்டில்தான்.

Former Indian National Congress president Mukhtar Ahmed Ansari s grand son Mukhtar Ansari

மாஜி துணை ஜனாதிபதி உறவினர்: தற்போது மரணமடைந்த முக்தார் அன்சாரி, முன்னாள் துணை ஜனாதிபதி முகம்மது ஹமீத் அன்சாரியின் உறவினரும் கூட. நாட்டின் 12-வது துணை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் முகம்மது ஹமீத் அன்சாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+