இந்தியாவிற்கு தேவை தானியங்கள்... துப்பாக்கிகள் அல்ல: எம்.எஸ். சுவாமிநாதன்
அகோலா: இந்தியாவிற்கு தேவை தானியங்களை சேமிப்பது தான், துப்பாக்கிகளை குவிப்பதல்ல எனக் கருத்துத் தெரிவித்துள்ளார் விவசாய விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்.
நேற்று மகாராஷ்டிரா மாநிலம் அகோலாவிலுள்ள டாக்டர். பஞ்சாப்ராவ் தேஷ்முக் கிஷி வித்யாபீட விவசாய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் இந்திய பசுமை புரட்சியின் தந்தை எனப் போற்றப் படும் விவசாய விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கலந்துகொண்டார்.
அப்போது, மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

புரியாத புதிர்....
விவசாய உற்பத்தியில் நாட்டில் போதுமான முன்னேற்றமிருந்தும், இந்தியாவில் பரவலான ஊட்டச்சத்து குறைபாடுகள் அதிகரித்து இருப்பது புரியாத புதிராக உள்ளது. போதுமான உணவு பற்றாக்குறையையும் தாண்டி பட்டினி கிடப்போர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

தொடர் பட்டினி....
ஊட்டச்சத்து குறைபாட்டால், மக்கள் தொடர் பட்டினிக்கு ஆளாக்கப்படுகிறார்கள். சிலநேரங்களில் நோய்வாய்பட்ட மனிதர்களால் நுண்ணூட்டச்சத்துக்களை ஏற்கமுடியாதபடி உடல் பலஹீனம் அடைந்து விடுகிறது.

தானிய சேமிப்பு....
எனவே வருங்கால இந்தியாவிற்கு தேவை, துப்பாக்கிகளை குவித்துகொண்டிருப்பதல்ல. மிதமான உணவுதானியங்களே சேமிப்பதே. தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டம் கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த பிறகு, இந்திய விவசாயத்திற்கு சட்டப்பூர்வமான பொறுப்புகள் அதிகரித்துள்ளன.

தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டம்...
மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்ட நமது தேசத்திற்கு தேவையான உணவை வழங்க இந்த சட்டமானது அரசை வலியுறுத்துகிறது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications