சுஷ்மா ஸ்வராஜ் நாளை இலங்கை பயணம்.. "கொள்ளையடிக்க" வருவதாக மாஜி அமைச்சர் பிரீஸ் கடும் தாக்கு!!
டெல்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாளை இலங்கை பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அவரது பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ், அந்நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கவே சுஷ்மா ஸ்வராஜ் வருகை தரப் போவதாக சாடியுள்ளார்.
தமிழக மீனவர் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக சுஷ்மா ஸ்வராஜ் நாளை முதல் 2 நாள் பயணமாக இலங்கை செல்ல உள்ளார். கொழும்பில் நடைபெறும் 9-வது இலங்கை- இந்தியா கூட்டுக் குழு கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

இக்கூட்டத்தில் பொருளாதார ஒத்துழைப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, கல்வி விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். அடுத்ததாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவையும் சுஷ்மா ஸ்வராஜ் சந்திக்கிறார்.
இதன் பின்னர் 6-ந் தேதியன்று யாழ்ப்பாணத்துக்கு சுஷ்மா ஸ்வராஜ் செல்ல முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே சுஷ்மா ஸ்வராஜின் இலங்கை பயணத்துக்கு அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜி.எல். பீரிஸ், இலங்கையின் இயற்கை வளங்களை முழுமையாக கொள்ளையடித்துவிட்டுப் போவதற்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெறவே சுஷ்மா ஸ்வராஜ் இலங்கை வருகிறார்.
அவருடன் பல்வேறு வர்த்தக உடன்பாடுகளில் இலங்கை அரசு கையெழுத்திட உள்ளது. சுஷ்மா ஸ்வராஜை நேரில் சந்தித்து எதிர்ப்பு தெரிவிக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications