கோவாவில் புதிய திருப்பம்! செங்குத்து பிளவில் இருந்து தப்பியது காங்... 10 எம்.எல்.ஏ.க்கள் ரிட்டர்ன்!
பனாஜி: கோவா அரசியலில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த பரபரப்பு தற்போதைக்கு ஓய்ந்துள்ளது. பாஜகவுக்கு தாவக் கூடும் என கூறப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மீண்டும் கட்சி கூட்டத்தில் பங்கேற்றதால் அக்கட்சித் தலைவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த 11 எம்.எல்.ஏக்களில் 6 பேர் திடீரென தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டனர். 11 எம்.எல்.ஏக்களில் 7 பேர் பாஜகவுக்கு தாவப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி காங்கிரஸுக்கு அதிர்ச்சியை கொடுத்தன.

இதனையடுத்து காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் பனாஜியில் முகாமிட்டு காணாமல் போன எம்.எல்.ஏக்களை மீட்டுக் கொண்டுவருவதில் முனைப்பாக செயல்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான மைக்கேல் லோபோ தலைமையில்தான் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவப் போவதாகவும் கூறப்பட்டது. இதனால் மைக்கேல் லோபா, எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அத்துடன் முன்னாள் முதல்வர் திகம்பர் காமத், மைக்கேல் லோபோ இருவரையும் தகுதி நீக்கம் செய்யவும் காங்கிரஸ் சபாநாயகரிடம் மனு கொடுத்தது.
இந்த நிலையில் பனாஜியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய திருப்பமாக மொத்தம் உள்ள காங்கிரஸின் 11 எம்.எல்.ஏக்களில் 10 பேர் பங்கேற்றனர். அதிலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மைக்கேல் லோபோவும் பங்கேற்றார். இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் 2 மணிநேரம் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கோவா மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கோவா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அமித் பட்கார் ஆகியோர் இந்தக் கூட்டத்தை ஒருங்கிணைத்தனர். மூத்த காங்கிரஸ் தலைவர் முகுல் வாஸ்னிக் இக்கூட்டத்துக்கு தலைமை வகித்தார்.
கோவா குழப்பம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முகுல் வாஸ்னிக், கோவா காங்கிரஸில் பிளவை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால் கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர் என்பதை நிரூபித்துவிட்டனர். மாநிலத்தில் கட்சியை பலப்படுத்துவது; சட்டசபையில் ஆக்கப்பூர்வமாக செயல்படுவது குறித்து நாங்கள் இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தினோம். அப்போது, 2 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் மனுவை திரும்பப் பெறுவீர்களா? எனவும் முகுல் வாஸ்னிக்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முகுல் வாஸ்னிக், அனைத்து கேள்விகளையும் இப்போதே கேட்கவேண்டாம்.. கொஞ்சம் பொறுத்திருங்கள் என்றார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications