கோவா சட்டசபை தேர்தல் முடிவுகள்.. முதல்வர் பிரமோத் சாவந்த் வெற்றி
பனாஜி: கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில் 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.
கோவாவில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அங்கு பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி கோவா பார்வேர்டு கட்சியுடன் இணைந்து போட்டியிட்டுள்ளது. இதில் காங்கிஸ் 37 இடங்களிலும் கோவா பார்வேர்டு கட்சி 3 இடங்களிலும் போட்டியிட்டுள்ளது.

ஆம் ஆத்மியும் தனித்து 39 இடங்களிலும் போட்டியிட்டுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளன. அது போல் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சியும் இணைந்து தேர்தலை சந்தித்துள்ளன.
இந்த தேர்தலில் பெரும்பான்மை பெற 21 இடங்கள் தேவைப்படுகிறது. அதில் தற்போது பாஜக 18 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 12 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. சாங்கியூலிம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் பிரமோத் சாவந்த் முதலில் பின்னடைவை சந்தித்தார்.
Recommended Video
பின்னர் தற்போது 500 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் கோவாவில் பாஜக ஆட்சி அமையும் என்றார். கோவாவில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தொங்கு சட்டசபை ஏற்படும் நிலையில் முதல்வர் சாவந்த் இவ்வாறு கூறியுள்ளார். கோவாவில் பாஜக ஆட்சி அமைந்தால் முதல்வராக பதவியேற்பது பிரமோத் சாவந்தா இல்லை விஷ்வஜித் ரானேவா என தெரியவில்லை. இருவருமே முதல்வர் பதவிக்கான ரேஸில் உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications