கர்நாடகா ஆளுநர் முடிவால் கோவா பாஜக அரசுக்கு நெருக்கடி- ஆட்சி அமைக்க உரிமை கோரி காங். போராட்டம்!
கோவாவில் தனிப்பெரும் கட்சியான தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்கிறது காங்கிரஸ்.
Recommended Video

பனாஜி: கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததால் கோவாவில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கோவாவில் தனிப்பெரும் கட்சியாக வென்ற காங்கிரஸை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி அக்கட்சி எம்.எல்.ஏக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கோவாவில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களிலும் பாஜக 13 தொகுதிகளிலும் வென்றது. தனிப்பெரும் கட்சியான காங்கிரஸை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் அழைக்கவில்லை.
பாஜகவும் சிறிய கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைத்து அம்மாநிலத்தில் ஆட்சி அமைத்தன. கோவா ஆளுநரின் இம்முடிவு மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

பெரும்பான்மை இல்லை
இந்த நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக 104 இடங்களைப் பெற்றது. காங்கிரஸ் 78, ஜேடிஎஸ் 37 இடங்களில் வென்றன. பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை.

தனிப்பெரும் கட்சி அடிப்படையில் முடிவு
தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் காங்கிரஸும் ஜேடிஎஸ்-ம் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரின. பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களை இந்த கூட்டணி பெற்றிருக்கிறது. ஆனால் கர்நாடகா ஆளுநர் வாஜூபாய் இதை நிராகரித்துவிட்டு தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார்.

ஆளுநர் முடிவால் சர்ச்சை
புதிய முதல்வராக பாஜகவின் எடியூரப்பா இன்று பதவியேற்றார். கர்நாடகா ஆளுநர் முடிவும் கடும் விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கிறது.

காங்கிரஸ் போர்க்கொடி
அத்துடன் கோவாவில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு இடியாப்ப சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியான பாஜகவுக்கு ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததைப் போல கோவாவில் தனிப்பெரும் கட்சியான எங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளது காங்கிரஸ்.

கோவா காங். பேரணி
மேலும் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆளுநர் மாளிகை நோக்கி நாளை பேரணி நடத்த உள்ளனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications