இப்பவே களை கட்டுதே... ஓட்டு எண்ணுவதற்கு முன்னரே கோவாவில் 'ஆள்பிடி’ கோதாவில் குதித்த பாஜக
பனாஜி: கோவா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணுவதற்கு முன்னரே தங்கள் கட்சி வேட்பாளர்களுடன் பாஜக தரப்பு பேரம் பேசுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கு கடந்த 14-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 79% வாக்குகள் பதிவாகின.

2017 தேர்தல் நிலவரம்
2017-ம் ஆண்டு கோவா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும் பாஜக 13 இடங்களிலும் வென்றது. ஆனால் பாஜக, மாநில கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அதன்பின்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு ஆட்சியையும் தக்க வைத்துக் கொண்டது. கோவாவில் எஞ்சிய காங்கிரஸ் தலைவர்களும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக என கட்சி தாவி உள்ளனர்.

பாஜக ஆட்சியை இழக்குமா?
தற்போதைய கோவா சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் மாறுபட்ட வகையில் வெளியாகின. கோவாவில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்கின்றனர் சில அரசியல் நோக்கர்கள். ஆனால் கோவாவில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும்; காங்கிரஸுக்கு சிங்கிள் டிஜிட் இடங்களே கிடைக்கும் என்கின்றன சில கருத்து கணிப்புகள். காங்கிரஸ் மேலிடமோ எப்படியும் கோவாவில் மீண்டும் தங்களது கட்சியே ஆட்சி அமைக்கும் என பெரும் நம்பிக்கையில் உள்ளது. அதனால்தான் தேர்தலுக்கு முன்னரே வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் கட்சி தாவமாட்டோம் என்கிற உறுதிமொழியை வாங்கியது காங்கிரஸ்.

பாஜக குதிரை பேரம்
கோவா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ந் தேதி எண்ணப்படுகின்றன. வாக்குகள் எண்ணுவதற்கு முன்னரே குதிரை பேரம் எனப்படுகின்றன ஆள்பிடி வேலையை பாஜக தொடங்கிவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தங்களது கட்சி வேட்பாளர்களை இழுக்க பாஜக பேரம் பேசி வருகிறது என்கிறது காங்கிரஸ். அக்கட்சியின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவுக்கு வார்னிங்
கோவா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கிரிஷ் சோதன்கர் கூறுகையில், பாஜக அமைச்சர்கள் எங்கள் கட்சி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெற்றி பெறக் கூடிய வாய்ப்புள்ள வேட்பாளர்களிடம் பாஜக பேரம் பேசி வருகிறது. பாஜக ஆட்சியை தக்க வைக்க முடியாது என்பதால் தங்களது பழைய பார்முலாவை கையில் எடுத்திருக்கிறது. பாஜகவை பொதுவெளியில் பகிரங்கமாக நாங்கள் எச்சரிக்கிறோம். இப்போதிருப்பது புதிய காங்கிரஸ். எங்களில் ஒருவர் பாஜக பக்கம் தாவப் போவது இல்லை என்பதை அக்கட்சி புரிந்து கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே இத்தகைய குதிரை பேர அரசியலைத் தொடங்கினால் அதற்கு பாஜக சரியான விலைகொடுக்க நேரிடும். கோவா மக்கள் இதை எல்லாம் சகித்து கொண்டிருக்கமாட்டார்கள் என்றார்.
-
அவசரமாக திரும்பி வந்த அண்ணாமலை.. சென்னையில் மோடி.. இன்று பாஜகவின் கடைசி நேர ஆபரேஷன்.. யாரந்த 16 பேர் -
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சாதி பெயர் இருந்தது தட்டச்சு பிழை - சிங்காநல்லூர் ஸ்ரீநிதி விளக்கம்! -
“நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன்..” திருமாவளவன் அறிவித்த வேட்பாளர் பேச்சால் குழப்பம்! -
Annamalai: தமிழக சட்டசபை தேர்தல்.. ஒரு வழியாக பாஜகவின் "அந்த" பட்டியலில் இடம்பெற்ற அண்ணாமலை பெயர்! -
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு! -
அண்ணாமலைக்கு இந்த பவர்ஃபுல் போஸ்ட்டிங் தர்றாரா மோடி.. கோவை பிடிவாதம் உடைந்ததா? லாபமா? நஷ்டமா -
எச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி? சென்னையில் உறுதி கொடுத்த பிரதமர் மோடி.. பாஜக மேலிடம் எடுத்த முடிவு! -
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம் -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
நம்மதான் ஜெயிக்கிறோம்.. கோவையில் செந்தில் பாலாஜி மாஸ் திட்டம்.. கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை -
விஜய் மனதில் பாஜக இருக்கிறது.. அடித்து சொல்லும் குஷ்பூ.. காரணம் தெரியுமா? -
தேர்தல் பரப்புரையில்.. துரந்தர், கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றி பேசிய மோடி! கேரளாவில் சலசலப்பு












Click it and Unblock the Notifications