இப்பவே களை கட்டுதே... ஓட்டு எண்ணுவதற்கு முன்னரே கோவாவில் 'ஆள்பிடி’ கோதாவில் குதித்த பாஜக
பனாஜி: கோவா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணுவதற்கு முன்னரே தங்கள் கட்சி வேட்பாளர்களுடன் பாஜக தரப்பு பேரம் பேசுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கு கடந்த 14-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 79% வாக்குகள் பதிவாகின.

2017 தேர்தல் நிலவரம்
2017-ம் ஆண்டு கோவா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும் பாஜக 13 இடங்களிலும் வென்றது. ஆனால் பாஜக, மாநில கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அதன்பின்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு ஆட்சியையும் தக்க வைத்துக் கொண்டது. கோவாவில் எஞ்சிய காங்கிரஸ் தலைவர்களும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக என கட்சி தாவி உள்ளனர்.

பாஜக ஆட்சியை இழக்குமா?
தற்போதைய கோவா சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் மாறுபட்ட வகையில் வெளியாகின. கோவாவில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்கின்றனர் சில அரசியல் நோக்கர்கள். ஆனால் கோவாவில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும்; காங்கிரஸுக்கு சிங்கிள் டிஜிட் இடங்களே கிடைக்கும் என்கின்றன சில கருத்து கணிப்புகள். காங்கிரஸ் மேலிடமோ எப்படியும் கோவாவில் மீண்டும் தங்களது கட்சியே ஆட்சி அமைக்கும் என பெரும் நம்பிக்கையில் உள்ளது. அதனால்தான் தேர்தலுக்கு முன்னரே வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் கட்சி தாவமாட்டோம் என்கிற உறுதிமொழியை வாங்கியது காங்கிரஸ்.

பாஜக குதிரை பேரம்
கோவா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ந் தேதி எண்ணப்படுகின்றன. வாக்குகள் எண்ணுவதற்கு முன்னரே குதிரை பேரம் எனப்படுகின்றன ஆள்பிடி வேலையை பாஜக தொடங்கிவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தங்களது கட்சி வேட்பாளர்களை இழுக்க பாஜக பேரம் பேசி வருகிறது என்கிறது காங்கிரஸ். அக்கட்சியின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவுக்கு வார்னிங்
கோவா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கிரிஷ் சோதன்கர் கூறுகையில், பாஜக அமைச்சர்கள் எங்கள் கட்சி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெற்றி பெறக் கூடிய வாய்ப்புள்ள வேட்பாளர்களிடம் பாஜக பேரம் பேசி வருகிறது. பாஜக ஆட்சியை தக்க வைக்க முடியாது என்பதால் தங்களது பழைய பார்முலாவை கையில் எடுத்திருக்கிறது. பாஜகவை பொதுவெளியில் பகிரங்கமாக நாங்கள் எச்சரிக்கிறோம். இப்போதிருப்பது புதிய காங்கிரஸ். எங்களில் ஒருவர் பாஜக பக்கம் தாவப் போவது இல்லை என்பதை அக்கட்சி புரிந்து கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே இத்தகைய குதிரை பேர அரசியலைத் தொடங்கினால் அதற்கு பாஜக சரியான விலைகொடுக்க நேரிடும். கோவா மக்கள் இதை எல்லாம் சகித்து கொண்டிருக்கமாட்டார்கள் என்றார்.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
புதுச்சேரியில் 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி.. பாஜக + அதிமுக + லஜகவுக்கு 14 சீட்! -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
காமராஜருக்கு தலைவலியாக மாறிய தொற்று நோய்.. ‘இன்புளுயன்ஸா’ நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை! -
விஜய் ஆசைக்கு ‘வேட்டு’ வைத்த ரங்கசாமி.. புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி கிடையாது.. அதிரடி முடிவு! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா?












Click it and Unblock the Notifications