பெங்களூர், ஹைதராபாத் அலுவலகங்களில் ஆள் பலத்தை அதிகரிக்கும் கூகுள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகின் முன்னணி நிறுவனமான கூகுளின் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக சுந்தர் பிச்சை இந்தியாவில் இன்று முதல் 2 நாள் பயணம் மேற்கொள்கிறார்.

டெல்லியில் நடைபெற்ற Google for India என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இந்தியாவின் வளர்ச்சியில் கூகுள் அளிக்கவுள்ள பங்கு குறித்து உரையாற்றினார்.

1972ம் ஆண்டு சென்னையில் பிறந்த சுந்தர் பிச்சை, ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி படித்தார். பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய அவர் தற்போது கூகுள் தலைமை செயல் அதிகாரி பொறுப்புக்கு வந்துள்ளார்.

முதல் பயணம்

முதல் பயணம்

கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியை, சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார். கடந்த ஆண்டு (2014) டெல்லி வந்த அவர் ஆண்ட்ராய்டு செல்போன் மென்பொருளை அறிமுகம் செய்தார். அதன்பிறகு தற்போது தலைமை செயல் அதிகாரி என்ற டாப் பதவியுடன் முதல் முறையாக டெல்லி வந்துள்ளார் சுந்தர் பிச்சை.

இந்தியாவுக்கான கூகுள்

இந்தியாவுக்கான கூகுள்

உலகின் முன்னணி நிறுவனமான கூகுளின் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக சுந்தர் பிச்சை இந்தியாவில் இன்று முதல் 2 நாள் பயணம் மேற்கொள்கிறார். டெல்லியில் நடைபெற்ற Google for India என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இந்தியாவின் வளர்ச்சியில் கூகுள் அளிக்கவுள்ள பங்கு குறித்து உரையாற்றினார்.

பிரணாப், மோடியுடன் சந்திப்பு

பிரணாப், மோடியுடன் சந்திப்பு

நாளை (வியாழக்கிழமை) காலை ஸ்ரீராம் கல்லூரி மாணவர்களுடன் சுந்தர் பிச்சை கலந்துரையாடுகிறார். பிறகு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். மாலை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சுந்தர் பிச்சை சந்திக்கிறார். அவருக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து அளிக்கிறார்.

இலவச வைஃபை

இலவச வைஃபை

இன்றைய Google for India நிகழ்ச்சியில் சுந்தர் பிச்சை பேசியதாவது: இந்தியாவின் 100 ரயில் நிலையங்களில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இலவச வைஃவை வசதியை ரயில்வேயுடன் இணைந்து கூகுள் அளிக்கும். ரயில் டெல்லுடன் இணைந்து, வரும் ஜனவரி மாதத்திற்குள் மும்பை மத்திய ரயில் நிலையத்தை லைவாக பார்க்கும் வசதி செய்யப்படும்.

பெங்களூரில் கூடுதல் பணியாளர்

பெங்களூரில் கூடுதல் பணியாளர்

அனைத்து தரப்புக்கும் இணையதள பயன்பாடு சென்று சேர வேண்டும் என்பதே கூகுளின் நோக்கம். இந்தியாவில் கூகுள் தனது இன்ஜினியரிங் பணிகளை அதிகரிக்க உள்ளது. பெங்களூரிலுள்ள கூகுள் அலுவலகத்தில் கூடுதலாக பணியாளர்கள் சேர்க்கப்படுவார்கள்.

ஹைதராபாத்தில் கேம்பஸ்

ஹைதராபாத்தில் கேம்பஸ்

ஹைதராபாத்தில் புதிதாக பெரிய அளவிலான கூகுள் அலுவலகம் திறக்கப்படும். இதனால் கூடுதல் பணியாளர்கள் சேர்க்கப்படுவார்கள். பெண்களுக்கு இணையதள பயன்பாடு பரிட்சையத்தை ஏற்படுத்துவதற்காக, சைக்கிள் புரோக்ராம் நடத்துகிறோம். 3 லட்சம் கிராமங்களை இந்த திட்டத்தில் இணைக்க உள்ளோம் என்றார் சுந்தர் பிச்சை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+