கூகுளின் “நானோ டிகிரி” கோர்ஸ் - உதவித் தொகையுடன் படிக்க ஒரு அரிய வாய்ப்பு!
டெல்லி: இந்தியாவில் சாப்ட்வேர் டெவலப்பர்கள் திறமையை மேலும் அதிகப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஆன்ட்ராய்ட் நானோ டிகிரி கோர்ஸ் படிப்பை 1000 பேருக்கு ஸ்காலர்ஷிப்புடன் கூகுள் மற்றும் டாடா டிரஸ்ட் வழங்க உள்ளது.
இந்த புதிய வகுப்பினை இந்தியாவின் தலைசிறந்த இரண்டு நிறுவனங்களுடன் கைகோர்த்து ஆரம்பித்துள்ளது கூகுள்.
தகவல் தொழில்நுட்ப யுகத்தின் ஜாம்பவானாக திகழும் கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள், மற்றும் கூகுள் போனின் இயங்கு தளத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆப்ஸ் டெவலப்பர்களுக்கான இந்தப் பயிற்சி திட்டத்தினை நேற்று முதல் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து வகுப்புகள்:
இவர்களுக்கான வகுப்புகளை அமெரிக்காவில் உள்ள அந்நிறுவனத்தின் பயிற்றுனர்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

டாடா நிறுவனத்துடன் இணைவு:
இந்தியாவில் மென்பொருள் மேம்பாட்டு திறனை அதிகரிக்கும் வகையில் நானோடிகிரி கோர்ஸ் என்ற பெயரில் உடாசிட்டி மற்றும் இந்தியாவின் டாடா நிறுவனத்துடன் இணைந்து பயிற்சியளிக்க கூகுள் முடிவு செய்துள்ளது.

உதவித்தொகையும் உண்டு:
முதல் ஆயிரம் பேருக்கு மட்டும் உதவித்தொகையுடன் இந்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. எனினும், மற்றவர்களுக்கு கட்டணம் இந்திய மதிப்பில் மாதம் சுமார் 9,800 ஆகும். எனினும் அவர்களும் இதில் 50 சதவீதத்தை பயிற்சி முடியும்போது திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலிடம் பிடிக்கும்:
சாப்ட்வேர் டெவலப்பர் அதிகம் உள்ள நாடுகளில் பட்டியலில், இந்தியா தற்போது இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும், 2018 ஆம் ஆண்டிற்குள் இப்பிரிவில் இந்தியா முதலிடம் பிடித்துவிடும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications