கோவிந்த் பன்சாரே கொலை வழக்கு- முக்கிய குற்றவாளியை அடையாளம் கண்டது காவல்துறை!
Subscribe to Oneindia Tamil
மும்பை : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பன்சாரே கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் கோலாப்பூர் நகரில் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், பகுத்தறிவாளருமான கோவிந்த் பன்சாரே மற்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இக்கொலை தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளியை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
அவர்களிடம் நடைபெற்று வந்த தீவிர விசாரணையின் முடிவில் சனாதன் சனஸ்தா என்ற அமைப்பை சேர்ந்த ருத்ரா பாட்டில் தான் முதன்மை குற்றவாளி என்பதை போலீசார் உறுதிசெய்துள்ளனர். இவரை பிடிக்க மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications