ராணுவ வீரர்களுக்கு ஒரு ரேங்க், ஒரு பென்ஷன்! மோடி உறுதி
டெல்லி: நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஒரு ரேங்க் ஒரு பென்ஷன் திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டரில் பிரதமர் குறிப்பிட்டுள்ளதாவது: ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. அதனால் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 'ஒன்ரேங் ஒன் பென்ஷன்' என்ற புதிய திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்றும், இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று தெரிவித்திருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ராணுவ வீரர்கள் அதிருப்தியடைந்திருந்ததாக தகவல்கள் வெளியாகிய நிலையில் மோடி இந்த டிவிட்டை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications