உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாகக் குறைப்பு
டெல்லி: விவசாய அமைப்புகளின் கோரிக்கைகளை ஏற்று உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் விதமாக சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி இன்று நள்ளிரவு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் டெல்லியில் நடந்தது. இதில் ஜிஎஸ்டியில் விவசாயிகளின் முக்கியத் தேவையான உரங்களின் வரியை குறைப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன.
இறுதியில் உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரங்கள் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் டிராக்டர் உதிரி பாகங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உரங்கள் மீது 12 சதவீத வரி விதிக்கப்பட்டதற்கு விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. வரி உயர்வால் விவசாய இடுபொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தால் விவசாயிகள் நிலைமை இன்னமும் கூட கவலைக்கிடமாகும் என்று பல்வேறு விவசாய அமைப்புகள் மத்திய அரசிடம் முறையிடு செய்தன. இதையடுத்து வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications