மத்திய அரசு, குஜராத் அரசுக்கு எதிராக போராட்டம்: சங்பரிவாரின் விவசாய சங்கம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: மத்திய அரசு மற்றும் குஜராத் அரசுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக சங்பரிவாரத்தின் குஜராத் விவசாய சங்கம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் இயங்கி வரும் பாரதிய கிஷான் சங் என்ற விவசாயிகள் சங்கம், இந்துத்துவா அமைப்புகளின் விவசாயப் பிரிவு. பஞ்சு மற்றும் நிலக்கடலைக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தது.

Gujarat farmers protest govt policies

இதற்காக குஜராத்தின் ஆளும் பாஜக அரசுக்கு பாரதிய கிஷான் சங் காலக்கெடு விதித்தும் இருந்தது. இருப்பினும் தங்களது கோரிக்கை நிறைவேறாத நிலையில் போராட்டத்தைத் தொடரப் போவதாக சங் பரிவாரத்தின் விவசாய சங்கம் அறிவித்துள்ளது.

பஞ்சு பேல் ஒன்றுக்கான கொள்முதல் விலையை ரூ800-ல் இருந்து ரூ1,100 ஆக உயர்த்த வேண்டும்; 20 கிலோ நிலக்கடலையின் கொள்முதல் விலையை ரூ1,100ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+