ராஜஸ்தானில் இடஒதுக்கீடு போராட்டம்... இன்று குஜ்ஜார் மகாபஞ்சாயத்து கூட்டம்- இணையசேவை துண்டிப்பு!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் ஜாதியினருக்கு இடஒதுக்கீடு கோரி மீண்டும் போராட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக குஜ்ஜார் மகாபஞ்சாயத்து இன்று கூடுவதால் ராஜஸ்தானின் பல பகுதிகளில் இணையசேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தானில் குஜ்ஜார் உட்பட 5 மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதனை பாதுகாக்கும் வகையில் அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை

இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது குஜ்ஜா ஜாதியினரின் கோரிக்கை. இது தொடர்பாக ஆலோசனை நடத்த குஜ்ஜார் ஜாதியினரின் மகாபஞ்சாயத்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
மக்சுந்தரபுரா தேவ்நாராயண் கோவிலில் இந்த மகாபஞ்சாயத்து கூட்டம் நடைபெறும் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் பாரத்புரா பகுதிக்கு இந்த மகாபஞ்சாயத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ராஜஸ்தானில் குஜ்ஜார்கள் நீண்டகாலமாக இடஒதுக்கீடு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறும் பாரத்புராவில் ஏற்கனவே இடஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க குஜ்ஜார் ஜாதியினர் பெரும்பான்மையினராக உள்ள பகுதியில் இணையசேவை முடக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களும் இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் முழுவதும் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications