பாலியல் தொல்லை.. ஒரே நேரத்தில் 444 மாணவிகள் வழக்கு... "ஷாக்" ஆன கோழிக்கோடு பல்கலை!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 444 மாணவிகள் கையெழுத்து போட்டு கேரள ஹைகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்து உள்ளனர்.
அந்த மனுவில் பல்கலைக்கழக மாணவர்களாலும், வெளியாட்களாலும் தங்களுக்கு தொல்லை ஏற்படுவதாகவும் பல முறை அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் தங்களது கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அந்த மனுவில் துன்புறுத்தல் செய்வது, ஆபாசமான முத்திரைகள் காட்டுவது, உடல் ரீதியான மிரட்டல், பொது இடங்களில் கேலி செய்வது என இது போல் பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக பல்கலைக்கழக அதிகாரிகளும் மற்றும் போலீசாரும் எடுத்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்து விட்டன.
இந்த பல்கலைக்கழக வளாகத்தில் 80 சதவீதம் பெண்கள் சிறிய அளவிலான பாதுகாப்பு மட்டுமே அவர்களுக்கு பல்கலைக்கழக அதிகாரிகளால் வழங்கப்படுகிறது. இந்த மனுவில் முதலில் அனுபாமா எம்.பில் மாணவி கையெழுத்திட்டு உள்ளார். இந்த மனுவின் நகலை தலைமை நீதிபதி அசோக் பூஷன், ஆளுநர் நீதிபதி சதாசிவத்திற்கு அனுப்பி வைத்து உள்ளார்.
இது தொடர்பாக பதிவாளர் டாக்டர் டி.ஏ அப்துல் மஜீத் கூறும் போது பல்கலைக்கழகம் அது பெற்ற அனைத்து புகார்கள் மீதும் நடவடிக்கை எடுத்து உள்ளது. இத்தகைய புகார் திடீரென்று எப்படி வந்தது என்று எனக்கு தெரியவில்லை. சில ராகிங் வழக்குகள் சமீபத்தில் வந்து இருந்தன. அதனை நாங்கள் பெண்கள் குழுவுக்கு அனுப்பிவைத்தோம். சில வழக்குகள் போலீசிலிலும் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் உள்ள 105 உயர் கல்வி நிறுவனங்களில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எடுத்த அறிக்கையின் 2014-15 கால கட்டங்களில் பல்வேறு பல்கலைகழகங்களில் 295 பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications