வதேராவை அம்லப்படுத்திய அதிகாரி கெம்காவுக்கு எதிராக ஹரியான அரசு சார்ஜ்சீட்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர் வதேராவின் நிலக்கொள்ளையை அம்லப்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி கெம்காவுக்கு எதிராக அம்மாநில அரசு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா. ஹரியானா மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் கொடுத்து வாங்கி, பத்திரப்பதிவு துறையை ஏமாற்றி, பல கோடி ரூபாய் சம்பாதித்ததாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா குற்றம் சாட்டினார். மேலும் ராபர்ட் வதேராவுக்கும், தனியார் கட்டுமான நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.

இதனை அடுத்து அவர் அத்துறையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக ஹரியான மாநில காங்கிரஸ் அரசு ராபர்ட் வதேராவின் புகழுக்கு அசோம் கெம்கா களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளது.

ஹரியானா அரசு, கெம்காவுக்கு நேற்று மாலை 7 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அனுப்பியுள்ளது. நிர்வாக சீர்கேடு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக் கோரி அம்மாநில முதல்வர் பூபிந்தர் சிங் கோடா உத்தரவிட்டதை அடுத்து இரண்டு மாதங்களாக குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டது.

அதில் சட்ட விரோதமாக ஒப்பந்ததை ரத்து செய்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக 15 நாட்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கெம்காவுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+