மத்திய பாஜக அரசின் வக்பு சட்டத்தின் கீழ் கேரளா இடதுசாரி அரசு புதிய வக்பு வாரியத்தை அமைத்துவிட்டதா?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் வக்பு சட்டத்தை ஏற்றுக் கொண்டு கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசு புதிய வக்பு வாரியம் அமைத்துவிட்டதாக வெளியான செய்திகளை அம்மாநில அமைச்சர் அப்துர் ரஹிமான் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

கேரளா சிறுபான்மையினர் நல மற்றும் வக்பு அமைச்சர் அப்துர் ரஹிமான் இது தொடர்பாக கூறியிருப்பதாவது: புதிய திருத்தப்பட்ட வக்பு சட்டத்தின் கீழ் கேரள அரசு புதிய வக்பு வாரியத்தை அமைக்க முடிவு செய்துள்ளதாக ஒரு ஆங்கில பத்திரிகை வெளியிட்ட செய்தி முற்றிலும் தவறானது; மற்றும் மக்களைத் தவறாக வழி நடத்துவது.

Kerala11

2019 டிசம்பரில் அமைக்கப்பட்ட தற்போதைய வக்பு வாரியத்தின் பதவிக்காலம் முடிந்த நிலையில், பழைய வக்பு சட்டத்தின்படி புதிய உறுப்பினர்கள் மற்றும் தலைவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறை நடைபெற்று வருகிறது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி தற்போதைய வாரியம் தற்காலிகமாக தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட சட்டமானது, வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களையும் மாநில அரசே நியமிக்க வேண்டும் என்று கூறினாலும், கேரள அரசு ஏற்கெனவே முந்தைய சட்டத்தின்படி உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் செயல்முறையில் உள்ளது.

திருத்தப்பட்ட சட்டத்தின்படி, ஒரு வாரியத்தை உருவாக்க தேர்தல் அதிகாரி அல்லது வாக்காளர் பட்டியல் தயாரிப்பு தேவையில்லை. ஆனால், கேரள அரசானது, வக்பு விவகாரங்களை கையாளும் ஒரு கூடுதல் செயலாளரை, தேர்தல் அதிகாரியாக நியமித்துள்ளது. முத்தவல்லிகளை தேர்ந்தெடுப்பதற்கான வாக்காளர் வரைவு பட்டியலையும், தேர்தல் விதிகளின்படி ஆட்சேபனைகளை சேகரிப்பதற்காக வெளியிட்டுள்ளது.

வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் கேரளம். திருத்தப்பட்ட சட்டத்தின்படி, ஒவ்வொரு உறுப்பினரும் அரசு நியமனத்தின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்படுவார். ஆனால், தேர்தல் அதிகாரி கேரளத்திலிருந்து முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களையும் தேர்தல் செயல்முறைக்காக பெற்றுள்ளார். ஏனெனில், வக்பு சட்டத்தை திருத்தும் முயற்சியை கேரளம் வலுவாக எதிர்த்துள்ளது.

கேரள மாநில அரசு தனது கவலைகளை தெரிவித்து, வக்பு சட்டத்தில் முன்மொழியப்பட்ட 44 திருத்தங்களை எதிர்த்து ஒரு குறிப்பை தயாரித்து, ஒன்றிய சிறுபான்மையினர் விவகார அமைச்சர் மற்றும் கூட்டு நாடாளுமன்றக் குழுவின் தலைவரிடம் ஒப்படைத்துள்ளது.

திருத்த மசோதாவுக்கு எதிராக கடுமையான ஆட்சேபனைகளைத் தெரிவித்து, கேரள சட்டமன்றத்தில் ஒரு மனதான தீர்மானத்தையும் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பிய முதல் மாநிலம் கேரளம்.

அனைவரிடமும் ஆலோசித்து உறுதி செய்யப்பட்ட நிலைபாடு 2024 அக்டோபரில் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்கள் மற்றும் சமூகத் தலைவர்களை உள்ளடக்கிய ஒரு பயிலரங்கை நடத்தி, திருத்த மசோதாவுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை கேரள அரசு முடிவு செய்தது.

புதிய திருத்த மசோதா முனம்பம் நில பிரச்சனைகளை தீர்க்க உதவும் என்று பாஜக மற்றும் சில குழுக்கள் பரப்பிய பிரச்சாரத்தையும் அரசு எதிர்த்தது. புதிய சட்டம் எந்த விதத்திலும் முனம்பம் பிரச்சனையை தீர்க்க முடியாது என்று ஒன்றிய சிறுபான்மையினர் விவகார அமைச்சரே தெளிவுபடுத்தியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

திருத்தத்தில் முன்மொழியப்பட்ட சில விதிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவை கேரள மாநிலம் வரவேற்றது. வக்பு திருத்தச் சட்டத்தை தொடர்ந்து சட்டப்பூர்வமாக எதிர்க்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள உண்மைகள் இருந்தபோதிலும், அரசுக்கு எதிரான சில தவறான பிரச்சாரங்கள் இடது ஜனநாயக முன்னணி அரசின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு, தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டவை. இவ்வாறு கேரளா சிறுபான்மையினர் நல மற்றும் வக்பு அமைச்சர் வி.அப்துர் ரஹிமான் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+