என்னாது 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்திட்டாங்களா..?
2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தி உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி : அதிக மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதையும், புழக்கத்தில் வெளியிடுவதையும் ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்து இருக்கலாம் என்று எஸ்பி.ஐ.,யின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி உயர் மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற பணமதிப்பிழப்பு நடவடிக்கை பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் புழக்கத்தில் இருந்த 86 சதவிகித நோட்டுகள் செல்லாதவையாக மாறியது. அதை சமாளிக்கும் வகையில் 2000 மற்றும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், எஸ்.பி.ஐ வங்கியின் ஆய்வறிக்கையான எக்கோபிளாஷ் என்கிற ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. இதை எஸ்.பி.ஐ வங்கி குழுமத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் செளமியா கோஷ் எழுதி உள்ளார்.
இதில், மக்களவையில் சமீபத்தில் சமர்பிக்கப்பட்ட ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரப்படி, கடந்த மார்ச் மாதம் வரை 3.5 லட்சம் கோடி என்கிற அளவில் சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அதே சமயம் டிசம்பர் 8ம் தேதிப்படி, 13.32 லட்சம் கோடி உயர் மதிப்புடைய நோட்டுகள் இருந்தன என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதே சமயம் மக்களவையில் வெளியிடப்பட்ட நிதித்துறையின் ஆய்வறிக்கையின் படி, டிசம்பர் 8ம் தேதி வரை, புதியதாக 1,695 கோடி 500 ரூபாய் நோட்டுகளும், 365 கோடி 2000 ரூபாய் நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டு இருந்தன. இவற்றின் மொத்த ரூபாய் மதிப்பு 15.78 லட்சம் கோடி ஆகும்.
ஏற்கனவே புழக்கத்தில் இருப்பது 13.32 லட்சம் கோடி ரூபாய், அச்சடிக்கப்பட்டது 15.78 லட்சம் கோடி ரூபாய் எனில் இன்னமும் 2.46 லட்சம் கோடி ரூபாய் பணத்தை வெளியிடாமல் ரிசர்வ் வங்கி தன் கைவசம் வைத்து உள்ளது என்பதை புள்ளி விவரங்கள் மூலம் அறிய முடிகிறது.
2000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக புழக்கத்தில் இருப்பதால், மீதம் இருக்கும் நோட்டுகளையும் வெளியிட்டால் அதிக சில்லறை தட்டுப்பாடு வரலாம் என்று கருதி ஆர்.பி.ஐ வங்கி உயர் மதிப்பு நோட்டுகளை வெளியிடாமல் வைத்திருக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,உயர் மதிப்பு நோட்டுகள் அச்சடிப்பதையும் ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்து உள்ளது.
சில்லறை தட்டுப்பாட்டை சமாளிக்க புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் புழக்கத்தில் விடப்பட்டு இருந்தாலும், இன்னமும் நிலைமை சரியாகவில்லை. இந்த நிலைமைய சமாளிக்க ரிசர்வ் வங்கி குறைந்த மதிப்புடைய நோட்டுகளை அச்சடித்து இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications