20 தமிழர்கள் படுகொலை- விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஆந்திர அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஹைதராபாத்: 20 தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய ஆந்திரா அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பதி காட்டுப் பகுதியில் செம்மரங்கள் கடத்தியதாக 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். திருவண்ணாமலையை சேர்ந்த 12 பேர், தர்மபுரியை சேர்ந்த 7 பேர் சேலத்தை சேர்ந்த ஒருவர் பலியானார்கள்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டது. மேலும் டி.ஐ.ஜி. தலைமையிலான விசாரணை குழுவை அமைத்தது.
சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் உறவினர்கள் மற்றும் மனித உரிமை ஆணையம் இது தொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, ஆந்திர மாநில போலீஸ் விசாரணை அறிக்கையில் குறைபாடுகள் இருக்கிறது என்று பலியானவர்களின் உறவினர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து போலீசின் விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய ஆந்திர அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 8-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications